tamilnadu

67 ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றுவதா?

67 ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும்  விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றுவதா?

சிபிஎம் கண்டனம் அரியலூர், செப்.27 - 67 ஆண்டுகளாக சாகுபடி செய்து  வரும் நிலத்தை விட்டு விவசாயிகளை வெளியேற்ற முயற்சிக்கும் நடவடிக் கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கண்டனம் தெரிவித்துள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் இலந்தகுடம் கிராமத்தில் விவசாயிகள் 67 ஆண்டுகளாக சுமார்  85 ஏக்கர் நிலத்தில், 82 விவசாயிகள் நெல் மற்றும் கரும்பு பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலத்தை, நீர்நிலை புறம்போக்கு என காரணம் காட்டி நிலத்தை விட்டு விவசாயிகளை வெளியேற்றுவதற்கான முயற்சியில் திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக புல்டோசர் இயந்திரங்களைக் கொண்டு  வந்தும் காவல்துறையை வைத்தும் விவ சாயிகளை அச்சுறுத்தி வருகின்றனர்.  இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரி வித்தனர். இதனையடுத்து கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துரைசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.சாமிதுரை மற்றும் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சரோஜினி ஆகியோர் விவ சாயிகளை நேரில் சந்தித்து கோரிக் கைகள் மற்றும் விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.  அப்போது விவசாயிகள், “85  ஏக்கர் நிலத்தில், 82 பேர், 67 ஆண்டு களாக நெல், கரும்பு உள்ளிட்ட பயிர் களை சாகுபடி செய்து வருவதாகவும், திருமானூர் ஒன்றிய நிர்வாகம் காவல் துறையை வைத்து தங்களை மிரட்டு வதாகவும், நிலத்தை விட்டு வெளியேற  வேண்டும் என்று அச்சுறுத்துவதாகவும் கூறினர். மேலும், எங்களுக்கு விவசா யத்தைத் தவிர வேறு தொழில் ஏதும் தெரியாது, விவசாயத்தை நம்பியே நாங்கள் உள்ளதாகவும்” கண்ணீர் மல்க தெரிவித்தனர்.  இந்நிலையில், கட்சியின் அரியலூர்  மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் துரை.அருணன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் மத்திய, மாநிலக் குழுவின்  முடிவுகளை விளக்கி கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் விளக்கிப் பேசினார். எதிர்கால செயல் திட்டம் குறித்து எழுத்துப்பூர்வ அறிக்கையினை முன் வைத்து மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன் பேசினார். அதனை தொடர்ந்து, இலந்தகுடம் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு எனக் கூறி  விவசாயிகளை, விவசாய நிலத்திலிருந்து  அப்புறப்படுத்த நினைக்கும் அதிகாரி களை கண்டித்து மாவட்டக் குழு  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனே சந்தித்து முறை யிடுவது என மாவட்டக் குழு முடிவு செய்துள்ளது.