tamilnadu

img

நீதி கிடைக்காமல் எந்த குடிமகனும் இருக்கக்கூடாது

சென்னை,நவ.22- மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நிய மிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கு பிரிவு உபசார விழா, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேஆர். ஸ்ரீராம் பேசும் போது, “சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த 8 ஆண்டு காலத் தில் 28,248 பிரதான வழக்கு களை கிருஷ்ணகுமார் முடித்து வைத்துள்ளது பாராட்டுக்குரியது. கடின உழைப்பு, நேர்மை, உண்மை ஆகிய பண்பு களின் மூலம் தந்தையின் விருப்பத்தை பூர்த்தி செய்து தலைமை நீதிபதியாக இருக்கிறார். தலைமை நீதிபதி நிவாரண நிதியை  நீட்டித்து நீதிபதி கிருஷ்ண குமார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்” என்றார். ஏற்புரையாற்றிய நீதிபதி கிருஷ்ணகுமார், “சென்னை உயர்நீதிமன்ற குடும்பத்தில் குழுவாக சாதித்ததை நினைத்து பெருமையுடன் விடை பெறுகிறேன். மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் புதிய அத்தியாயம் சவால் நிறைந் தது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீதித் துறை யை மேம்படுத்த வேண்டும். நீதி கிடைக்காமல் எந்த குடி மகனும் இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். மாவட்ட நீதித் துறையில் 72 சதவீத நீதிபதி கள் பலத்தைக் கொண்டு 101  சதவீத வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்திலும் 111 விழுக்காடு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன” என்றார். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பேசுகையில், மணிப்பூர் மாநிலத்தின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் நீதிபதி கிருஷ்ணகுமார், தனது ராஜாங்க திறமை களை கொண்டு அந்த மாநி லத்தில் அமைதி திரும்ப அரசுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.