tamilnadu

img

சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு

தூத்துக்குடி, மார்ச் 13 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க 15வது மாநில மாநாடு தூத்துக்குடியில் மார்ச் 12 ,13 தேதி களில் தோழர்கள் எஸ்.பொன் சேகர், கே.எஸ்.சங்கரன் வளாகத்தில்  நடைபெற்றது . இரண்டாவது நாள் நடைபெற்ற மாநாட்டில் தொகுப்புரை, நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் 17 பேர் கொண்ட புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக கலா (மயிலாடுதுறை), பொதுச்செயலாளராக மலர்விழி (புதுக்கோட்டை), மாநில பொருளாளராக திலகவதி (காஞ்சிபுரம்); மாநில  துணைத் தலைவர்களாக நூர்ஜஹான்- மதுரை, பேயத்தேவன் - தேனி, அண்ணாதுரை- திருவண்ணா மலை, பெரியசாமி- திருச்சி, மு. தமிழரசன்- தூத்துக்குடி , சுபந்தி- சென்னை. மஞ்சுளா- கிருஷ்ணகிரி;  மாநிலச் செயலாளர்களாக  கற்பகம்- சென்னை, சுமதி- வேலூர், மகேஸ்வரி- தருமபுரி. பாண்டிச்செல்வி- மதுரை, லதா-திருவாரூர். நிர்மலா- கோவை, மிக்கேலம்மாள்- சிவகங்கை; மாநில தனிக்கையாளர்களாக  தேசிங்கு- விழுப்புரம், தங்கம்-  கன்னியாகுமரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் நடைபெற்ற பொது மாநாட்டிற்கு மாநிலத்  தலைவர் கலா தலைமை வகித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் சுந்தர்ராஜன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில  பொதுச்செயலாளர் ஆ.செல்வம், மாநிலத் தலைவர் மு.அன்பரசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மலர்விழி தீர்மானங்கள் குறித்து விளக்க உரையாற்றி னார். நிறைவாக பேயத்தேவன் நன்றியுரை ஆற்றினார்.