புதுதில்லி,பிப்.13- உத்தரகாண்ட் மற்றும் கோவா மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 14 திங்களன்று நடைபெறு கிறது. கோவா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், கோவாவில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் நடை பெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.