தூத்துக்குடி, நவ.13 - தூத்துக்குடியில் கடல் அரிப்பு காரணமாக ரூ.12.10 லட்சத்தில் கட்டப்பட்ட மீன் வலை பின்னும் கூடம் கடலில் மூழ்கியது. தூத்துக்குடி தருவை குளம் பகுதியில் ரூ.12.10 லட்சத்தில் கட்டப்பட்ட மீன் வலை பின்னும் கூடம் கடல் அரிப்பு காரணமாக கடலில் மூழ்கியது மீனவர்கள் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. எனவே மீன் வலை பின்னும் கூடத்தை சீர மைக்கவும், இப்பகுதியில் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என தருவைக்குளம் மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.