1965-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகளில் காவிரிப் படுகையில் கிட்டத்தட்ட 12,850 சதுர கிலோமீட்டர் (31,75,305.5 ஏக்கர்) நிலப் பரப்பில் இயற்கைத் தாவரங்கள் அழிந்து விட்டதாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகள் டி.வி.ராமச்சந்திரா, வினய் எஸ்.பாரத், ஹெச்.பாரத் ஐதால் ஆகியோரால் எழுதப்பட்ட கட்டுரை விளக்குகிறது. (ஒரு சதுர கிலோ மீட்டர்= 247.105381 ஏக்கர்) மற்ற மாநிலங்களை விட கர்நாடகா மிக அதிகமாக இயற்கைத் தாவரங்களை இழந்துள்ளது. இதில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு கர்நாடகப் பகுதியில் உள்ளது. தமிழ்நாடு ஐந்தில் ஒரு பங்கை இழந்துள்ளது. இது கடந்த ஐம்பது ஆண்டுகளில் 45.55 சதவீதம் காடுகளின் இழப்பைக் குறிக்கிறது. கர்நாடகா 57 சதவீதம் (9664 சதுர கிமீ) மற்றும் தமிழ்நாடு 29 சதவீதம் (2905 சதுர கிமீ) கேரளா 27 சதவீதம் (279 சதுர கிமீ) இயற்கை தாவரங்களை இழந்துள்ளன. பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம், பந்திப்பூர் தேசியப் பூங்கா, நாகர்ஹோலே தேசியப் பூங்கா, காவிரி வனவிலங்கு சரணாலயம் ஆகியவை காடுகளின் பரப்பளவில் பெரும் பாதகமான மாற்றங் களை சந்தித்துள்ளன.
பன்னர்கட்டா தேசியப் பூங்காவில் 1973-ஆம் ஆண்டு சுமார் 50 சதவீத மாக இருந்த ஈரமான இலையுதிர்க் காடுக ளின் பரப்பு “மானுடவியல் அழுத்தம்” காரணமாக 2015-ஆம் ஆண்டு 28.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. பந்திப்பூர் மற்றும் நாகர்ஹோலே புலிகள் காப்பகங்கள் முறையே 15.19 சதவீதம், 11 சதவீதம் வனப் பரப்பை இழந்துள்ளன. பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தில் காடுகளின் பரப்பளவு 93.33 சதவீதத்திலிருந்து 87.66 சதவீத மாகக் குறைந்துள்ளது. ‘காவிரி ஆறு நில பயன்பாட்டு இயக்க வியல் பல்லுயிர் மற்றும் நீரியல் நிலை’ என்ற அறிக்கையில், 1965 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், வனப் பரப்பு குறைந்து, தண்ணீருக்கான தேவை அதி கரித்துள்ளது. 2016-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் கர்நாட கம், தமிழகத்தில் விவசாயப் பரப்பு அதிக ரிக்கிறது. காடுகளின் பரப்பளவு குறை கிறது. இதனால் தண்ணீரின் தேவை அதி கரித்துள்ளது என்கிறார் பேராசிரியர் டி.வி.ராமச்சந்திரா. அதாவது, தமிழ்நாட்டில், இந்தப் பத்தாண்டுகளில் நீர்ப்பாசனப் பரப்பு 6,556 சதுர கிலோமீட்டரிலிருந்து (13.8%) 20233 சதுர கிலோமீட்டராக (42.7%) அதி கரித்துள்ளது. கர்நாடகாவில், நீர்ப்பாச னப் பரப்பு 1,193 சதுர கிலோமீட்டரிலிருந்து (3.42%) 8,497 சதுர கிலோமீட்டராக (24.3%) அதிகரித்துள்ளது. மேலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிக ளில் விவசாய பணிகள் அதிகரித்துள்ள தாக முதற்கட்ட ஆய்வு தெரிவிப்பதாகக் கூறிய அவர், இரு மாநிலங்களிலும் ஏரி கள் தூர்வாரப்படவில்லை. இதனால், நீர் தேங்கும் திறன் குறைந்து, மோசமான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. அதிகாரி கள் உரிய நேரத்தில் ஏரிகளை தூர்வாரியி ருந்தால், ஏரிகளின் நீர் தேக்கும் திறன் அதிகரித்திருக்கும் என்றார்.