அறந்தாங்கி, அக்.27 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அறிவி யல் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கண்ணையன் தலைமை வகித்தார். வர்த்தக சங்க தலைவர் ரெ.தங்கதுரை துவக்கி வைத்தார். மாணவர் களால் உருவாக்கப்பட்ட சுமார் 250 அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ச.குமார், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சேகர், அறந்தாங்கி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் தெட்சிணாமூர்த்தி, டாக்டர். பிரேம் குமார், பிஸ்மி முபாரக் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் ரவி சங்கர், வி.சி செல்வம், ராசி செல்வம், முகமது ரபீக், அறந்தாங்கி நகர் மன்ற உறுப்பினர்கள் சங்கர், ரூபிணி ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி முதல்வர் சுரேஷ் குமார் வரவேற்றார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.