tamilnadu

img

தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறை கிணறு

விழுப்புரம், பிப். 23- விழுப்புரம் அருகே தென் பெண்ணை ஆற்றில் சங்ககால  உறைக்கிணறுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள பேரங்கி யூர் மற்றும் பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வர லாற்றுத்துறை பேராசிரியர்கள் ரமேஷ், ரங்கநாதன், பட்ட ஆய்வு மாணவர்கள் இமானுவேல், கோபி, வரலாற்றுத்துறை மாணவர்கள் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பூமியின் மேற்பரப்பில் 25க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் இரு ந்ததை கண்டறிந்தனர். இதில் 9 உறைகிணறுகள் நல்ல நிலையில் உள்ளது.

மற்ற உறைகிணறுகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மண் அரிப்பு ஏற்பட்டதால் உறைகிணறுகள், பூமி யின் மேற்பரப்பில் கண்டறியப்பட் டுள்ளன. இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், இந்த உறைக்கிணறுகள் 2 வகைகளாக உள்ளன. ஒன்று சொருகு வகை உறைக்கிணறு, மற்றொன்று அடுக்கு வகை உறைக்கிணறு. இங்கு  கண்டறிந்த உறைகிணறுகள் அடுக்கு வகையை சேர்ந்தவை. மிகவும் வறட்சி யான காலங்களில் இந்த உறைகிணறு கள் மக்களின் தண்ணீர் தேவையை பெரிதும் பூர்த்தி செய்து வந்துள்ளது. தண்ணீரை தெளிய வைக்கவும், மணல் சரியாமல் இருக்கவும் இது போன்ற அடுக்கு வகை உறைக் கிணறு அமைப்பை அக்காலத்தில் ஏற்படுத்தியுள்ளனர். இவற்றிலிருந்து மக்கள் சுகாதாரமான குடிநீர் பெற்றனர். இந்த உறைக்கிணறுகள் சங்க காலத்தை சார்ந்ததாகும். இதன் மூலம்  இப்பகுதியில் சங்க காலத்தில் மக்கள்  வாழ்ந்து இருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. மேலும் இங்கே இருக்கும் உறைக்கிணறுகள் அழிவின் விளிம்பில் இருப்பதால் இதனை  தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய  வேண்டும். அரசு அருங்காட்சியகத்தில் இந்த உறைக்கிணறுகள் பாது காப்பாக வைக்க வேண்டும். தென்பெண்ணையாற்றில் சங்க கால நாகரீகம் சிறந்து விளங்கி இருக் கிறது. இதைப் பற்றிய தொல்லியல் ஆய்வுகள் இன்னும் செய்யப்படாமல் இருக்கிறது. அந்த ஆய்வுகள் நடத்தப்பட்டால் நடுநாட்டு பகுதியில் சங்ககால மக்களின் பண்பாடுகளை வெளிக்கொணரலாம் என்று அவர்கள் கூறினர்.