நெல்லை திருமால்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்-ஜனனி தம்பதியர். இவர்களது மகள் தீக்ஷனா. இவர் பாளையங்கோட்டையில் உள்ள தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இளம் வயதிலேயே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டு ஓவியத்தில் பல சாதனைகள் செய்து வருகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி படத்தை ஒரு மணி நேரத்தில் எண்ணெய்யால் வரைந்து சாதனைபடைத்தார். தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் 150 சதுர அடி உயரத்தில் மண்ணினால் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களை வரைந்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34. கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழ
கண்காட்சி அரங்கு
இதனைத் தொடர்ந்து அடுத்த சாதனை நிகழ்வாக சங்க இலக்கியத்தில் புலவர் கபிலர் பாடிய காந்தள், ஆம்பல், அனிச்சம்,குவளை, குறிஞ்சி உள்ளிட்ட 99 தமிழ் பூக்களை யும் தனித் தனியாக 99 தாம்பூலதட்டில் வண்ணமயமாக வரைந்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இதனைக் காட்சிப்படுத்தும் நிகழ்வு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் அண்மையில் நடைபெற்றது. சாதனை கண்காட்சி அரங்கை மாவட்ட அறிவியல் அதிகாரி முத்துக்குமார் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் நாறும்பூ நாதன், மாவட்ட வன அலு வலர் இளங்கோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா ஆகியோர் கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவி தீக்ஷனாவை பாராட்டினர். மேலும் பள்ளி மாணவ மாணவி கள், பொதுமக்கள் ஆகியோர் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டுச் சென்றனர். இந்த சாதனை குறித்து மாணவி தீக்ஷனா கூறுகையில் எனது மூன்றாவது சாதனையாக தமிழ் பூக்கள் 99 என்ற தலைப்பில் சங்க இலக்கியத்தில் புலவர் கபிலர் பாடிய 99 பூக்களையும் தொகுத்து எடுத்து தனித்தனியாக 99 மலர் களையும் வரைந்து உள்ளேன். இந்த பூக்களை தாம்பூலத்தில் வரைய காரணம் கபிலர் ஆரிய அரசன் பிரகதத்னுக்கு தமிழரின் பெருமையை உணர்த்தும் வகையில் 99 பூக்களை ஒரே பாடலாக பாடியுள்ளார். தமிழ் கலாச்சாரப்படி தாம்பூலம் வைத்து வரவேற்பது நமது வழக்கம். அதனை மையப் படுத்தும் விதமாக தாம்பூலத்தில் வரைந்துள்ளதாகவும், தொடர்ந்து ஓவியத்தில் சாதனைகள் படைக்க ஆர்வமுள்ளதாகவும் தெரிவித்தார்.