அடையாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் திட்டப் பணி
சென்னை, அக்.24- அடையாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெசன்ட் நகர், ஊர்குப்பம் பகுதியில் உள்ள முகத்துவாரப் பகுதியில் மழைநீர் தடை யின்றி செல்வதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் வியாழனன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம் பாக்கம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை, வீராணம் ஆகிய 6 ஏரிகள் விளங்கு கின்றன. மொத்த நீர் தேக்கும் கொள்ளளவு 13,222 மில்லியன் கன அடி. தற்போது 10,028 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு அடையாறு 25 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே தாங்கும். இதற்கு மேல் நீர் வந்தால் அடையாற்று ஓரம் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் பாதிப்பு ஏற்படும். அடை யாற்றை சீர்படுத்த ரூ.1,500 கோடி செலவில் மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அடையாற்றிலிருந்து சைதாப் பேட்டை வரை இரு கரைகளிலும் கரைகள் எழுப்பி பலப்படுத்தி சுற்றுலா மையமாக மாற்றப்பட உள்ளது என்று அமைச்சர் தெரி வித்தார்.