திருவள்ளூர், மார்ச் 1- திருவள்ளூர் அடுத்த வெள்ளகுளம் பகுதியில் அதிமுக பிரமுகர் வீட்டில் 200 சவரன் நகை, 2 லட்சம் ரொக்கம் மற்றும் சொத்து பத்திரங்கள் நூதன முறையில் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ள குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அதிமுக பிரமுகரான இவர் ஒப்பந்ததா ரராகவும் உள்ளார். இந்நிலையில் செவ்வா யன்று (மார்ச்-1) அதிகாலை 5.30 மணியள வில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, இன்னோவா காரில் வந்தவர்கள் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் காரில் வந்து இறங்கி உள்ளனர். அப்போது வீட்டில் இருந்த பால முருகனிடம், செங்கல் சேம்பர் தொழிலும் செய்து வருவதால் தாங்கள் தற்போது வாங்கிய செங்கல் சேம்பரை எந்த வருமான அடிப்படையில் வாங்கினீர்கள் எனக் கேட்டு, அதற்கான பத்திரத்தை கொண்டு வரச் சொல்லி அது குறித்து விசாரித்துள்ளனர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக கூறி வீட்டிலுள்ள நகை பணத்தை கேட்டுள்ளனர். வீட்டிலிருந்த 200 சவரன் நகை 2 லட்சம் பணம் மற்றும் சொத்து பத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து கொடுத்துள் ளனர். இதனையடுத்து 20 நிமிடத்தில் விசாரணை முடிந்ததாக கூறி 200 சவரன் நகை, 2 லட்சம் ரொக்கம் மற்றும் சொத்து பத்திரங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கான எந்த ரசீதும் தராமல் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன் செவ்வாப் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி காவல் துணை ஆணையர் மகேஷ் மற்றும் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்ட னர்.வீட்டு வாசலில் உள்ள கண்காணிப்பு ேகமராவில்பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.