பழனி, நவ.11- பழனி அடிவாரம் பகுதியில் நீதி மன்றம் உத்தரவின்படி பத்தாயிரத் திற்கும் மேற்பட்ட சாலையோர சிறு, குறு கடைகள் அகற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் கடந்த 18.7.2024 அன்று சென்னை தலைமைச் செயல கத்தின் தலைமைச் செயலாளர் தலை மையில் பழனி அடிவார சாலையோர வியாபாரிகளுக்கு பழனி தேவஸ்தான நிர்வாகம் வாடகைக்கு இடம் எடுத்துக் கொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வருவாய்த்துறையில் இடம் அடை யாளம் காணப்பட்டு இறுதி செய்தும் பழனி திருக்கோயில் நிர்வாகம் ஒத்து ழைக்காமல் இருந்து வருகிறது. சாலை யோர வியாபாரிகளின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு கார்த்திகை, மார்கழி, தை மாதம் போன்ற சீசன் துவங்கியுள்ளதால் விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும். சாலை யோர வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கையான தேவஸ்தான டூரிஸ்ட் பஸ் ஸ்டாண்டில் இடம் வழங்க வேண்டும். அடிவாரம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட சாலையோர சிறு வியாபா ரிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. அதிகாரிகள் தலையிட்டு 2 நாள் கழித்து முடிவு சொல்வதாக தெரிவித்த னர். அதனை ஏற்காத அடிவாரம் சாலை யோர வியாபாரிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். காத்திருப்புப் போராட்டத்துக்கு சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே.பிரபா கரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.பிச்சைமுத்து, மாவட்டச் செயலாளர் சி.பி.ஜெயசீலன், மாநிலக் குழு உறுப்பினர் பேரா. சோ. மோகனா, துணைத் தலைவர்கள் கே.பிச்சைமுத்து, எஸ்.பி. மனோ கரன், நகரத் தலைவர் எம்.கோபிநாத், நகரச் செயலாளர் எம்.செந்தில்குமார் ஆகியோர் பேசினர். நகரப் பொருளாளர் எம்.காளீஸ்வரி நன்றி கூறினார். இதில் 300க்கும் மேற்பட்ட சாலையோர வியா பாரிகள் கலந்து கொண்டனர்