tamilnadu

வணிகவரி, பதிவுத் துறையில் ரூ.5.88 லட்சம் கோடி வருவாய்

வணிகவரி, பதிவுத் துறையில் ரூ.5.88 லட்சம் கோடி வருவாய் 

அமைச்சர் பி. மூர்த்தி தகவல்

சென்னை, ஏப். 24 - கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையில் மொத்தமாக ரூ. 5 லட்சத்து 88 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில், வணிக வரித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் மூர்த்தி, “மாநில அரசின் வரி வருவாயில், வணிகவரித் துறை மூலமாக 71.6 சதவிகிதமும், பதிவுத்துறை மூலம் 15.4 சதவிகிதமும் பெறப்படுகிறது. அரசின் தொடர் முயற்சிகள் மற்றும் முனைவுகளின் மூலம் 2024-2025ஆம் நிதியாண்டில் வணிகவரித்துறை 1 லட்சத்து 38 ஆயி ரத்து 120 கோடி மொத்தமாக வருவாய்  ஈட்டியுள்ளது” என்றார்.  மேலும் பேசிய அமைச்சர் மூர்த்தி,  “முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வணிகவரித்துறை மொத்த மாக ஈட்டிய வரி வருவாய் ரூ. 6.87 லட்சம் கோடியாகும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும்  இதுவரை ரூ. 5.88 லட்சம் கோடி வரு வாய் ஈட்டப்பட்டுள்ளது. பதிவுத் துறையைப் பொறுத்த மட்டில், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த  வருவாய் ரூ. 88 ஆயிரத்து 844 கோடியா கும். ஆனால், இந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதுவரை ரூ. 72 ஆயிரத்து 004 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது. இந்தத் துறைகளால் வசூலிக்கப்படும் வருவாயின் பங்களிப்பானது புதுமை யான பல திட்டங்களை செயல்படுத்தி, மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத்  தரத்தை உயர்த்தவும் ஆதாரமாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, இழப்பீட்டுத் தொகை இல்லாமல் ரூ. 85  ஆயிரத்து 867 கோடியாக வணிகவரித் துறையின் வரி வருவாய் இருந்தது. இது அரசின் தொடர் முயற்சிகளால் 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 120 கோடியாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியின் ஒப்பிடும்போது ரூ. 52 ஆயிரத்து 252 கோடி கூடுதலாகும். பதிவுத் துறையானது, கடந்த 160 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு  அரசின் வருவாய் ஈட்டுதல் மற்றும் சட்ட ஆவணப்படுத்தலின் முக்கிய பங்கு  வகித்து வருகிறது. இந்த துறை மாநிலத்தின் மிக முக்கியமான நிர்வாக அங்கங்களில் ஒன்றாக உள்ளதால் அரசின் மொத்த வருவாயில் 15.4 சத விகிதத்தை அளித்து 2-ஆம் இடத்தில் உள்ளது. 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ. 10 ஆயிரத்து 643 கோடியாக இருந்த  பதிவுத்துறையின் வருவாய், தற்போது ரூ. 21 ஆயிரத்து 968 கோடி யாக அதிகரித்துள்ளது. 7 புதிய பதி வுத்துறை அலுவலகங்கள் தொடங் கப்பட்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. பதி வுத்துறைக்கு தேவையான அடிப்படை  உள்கட்டமைப்புகளை வழங்குவதற்கு இந்த நிதியாண்டில் ரூ. 100 கோடி ஒதுக்கப்படும்” என்று தெரிவித்தார்.