‘கரிம சோதனை ஆய்வகம் வேண்டும்’
சென்னை: கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை அங்கீ கரிக்க மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் தொல். திரு மாவளவன் உரையாற்றினார். அப்போது, “தமிழகத்தில் கரிம சோதனைக்கான ஆய்வகத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும். இதற்கான செலவு 40 கோடி ரூபாய் முதல் 45 கோடி தான் ஆகும். ஆய்வு செய்யப்பட வேண்டிய பகுதிகளில் நாம் அகழாய்வுகளை செய்து அறிக்கை தயார் செய்து கொண்டே இருப்போம். ஒன்றிய அரசின் தொல்லி யல் துறை அதை ஏற்கும்போது ஏற்கட்டும்” என்றார்.
கடும் நடவடிக்கை பாயும்
சென்னை: விதிமுறைகளை மீறி அதிகக் கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடுமையாக எச்சரிக்கை செய்திருக்கிறார்.
பாஜகவை முருகன் தோற்கடிப்பார்
சென்னை: “அயோத்தியில் பாஜகவை ராமர் தோற் கடித்தது போல், தமிழ்நாட்டில் பாஜகவை முருகன் தோற்கடிப் பார். அவர், பாசிசவாதிகளின் கையில் ஒருபோதும் சிக்க மாட்டார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்திருக்கிறார்.
கனிமொழி எம்.பி. இரங்கல்
சென்னை: “மிசாவில் சிறைசென்று நெருக்கடியை எதிர்கொண்ட களப்போராளியும், இந்தி எதிர்ப்பு போரில் முன்னின்று போராடிய மொழிப் பற்றாளருமான மிசா ராம நாதன் மறைவுற்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது” என்று தனது இரங்கல் செய்தியில் திமுக எம்பி கனிமொழி கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவில் இருந்து நீக்கம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் மகன் ராஜா, சொந்த சகோதரியிடமே ரூ. 17 கோடியை மோசடி செய்த வழக்கில், மலேசியா தப்பிச்செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு பகுதிச் செயலாளராக இருந்த எஸ்.பி.எஸ். ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழில் குடமுழுக்கு
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூலை 7 அன்று தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், அன்றைய தினத்தில் செந்தமிழ் வேதங்கள் 64 ஓதுவார் மூர்த்திகளால் முற்றோதல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஹால் டிக்கெட்
சென்னை: 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான அனுமதிச் சீட்டுக்களை (ஹால் டிக்கெட்) ஜூன் 19 முதல் www.dge.tn.gov.in என்ற இணை யதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
22,855 பேர் விண்ணப்பம்
சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தில் சேர்க்கை பெறுவதற்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 20) மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்க இதுவரை 22,855 மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர்.
மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்; இல்லை என்றால் அபராதம்!
சென்னை, ஜூன் 18 - அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகள் விசாரணையை துவங்கும் முன் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை முன் வைத்தார். அதில் அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெ டுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்குமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அரசாணையின் படி 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால் ஏராள மான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என சுட்டிக்காட்டினார். பொதுநல வழக்குகள் விசாரணைக்கு வரும்போது 30 நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட வில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் எச்சரித்தார். இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் உறுதியளித்தார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தைத் தாண்டியது!
சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இதனிடையே, அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. பெற்றோர்கள் பலர் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். நடப் பாண்டில் 3 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. சேர்க்கைப் பணிகளை தீவிரப்படுத்த தலைமை ஆசிரி யர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் மாநிலம் முழு வதும் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 17,985 பேர் சேர்ந்துள்ளனர். குறைந்தபட்ச மாக நீலகிரியில் 1,327 பேர் சேர்ந்துள்ளனர்.
கொரோனா பரவலால் ஊரடங்கா? தமிழக அரசு விளக்கம்
சென்னை: தமிழ கத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜூன் 22 அன்று (ஞாயிற்றுக் கிழமை) ஊரடங்கு அறி விக்கப்படும் என்று அமைச் சர் மா. சுப்பிரமணியன் கூறியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் அதி காரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரி பார்ப்பகம் வெளியிட் டுள்ள பதிவில், “இது பழைய வீடியோ. 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு அறி விப்பதாக வெளியான செய்தியை தற்போது வெளியான செய்தி போல் தவறாக பரப்பி வரு கிறார்கள்” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
மகேந்திரகிரி இஸ்ரோவில் விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திர கிரி இஸ்ரோ மையத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட விகாஸ் என்ஜின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள் ளப் பட்டது. மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செவ்வா யன்று 17 வினாடிகளுக்கு மேம்படுத்தப்பட்ட விகாஸ் என்ஜின் சோதனை நடத்தப் பட்டது. இச்சோதனை முழு மையாக வெற்றி பெற்ற தாக இஸ்ரோ மைய அதி காரிகள் உறுதிப்படுத்தி யுள்ளனர். இந்த வெற்றி எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கும், குறிப் பாக இந்தியாவின் மனித விண்வெளி பயண திட்டமான ககன்யானுக் கும் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது என்றும், அதன் ஒரு படி முன் னேற்றம் இது என்றும் விண்வெளி ஆராய்ச்சியா ளர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர். விகாஸ் என்ஜின், இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளின் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப் படும் ஒரு முக்கிய திரவ உந்துசக்தி என்ஜின் என்பது குறிப்பிடத்தக்கது.