உச்சநீதிமன்ற ஊழியர் நியமனங்களில் முதன் முறையாக இடஒதுக்கீடு!
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு
சென்னை, ஜூலை 2 - உச்ச நீதிமன்ற ஊழியர் நிய மனங்களிலும், பதவி உயர்வுகளிலும் முதன் முறையாக பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமல்படுத்தப் பட்டு இருப்பதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள் ளனர். அதில் மேலும் கூறப்பட்டிருப்ப தாவது:
சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல் கல்
உச்ச நீதிமன்ற ஊழியர் நியமனங் களிலும், பதவி உயர்வுகளிலும் முதன் முறையாக பட்டியல் சாதி யினர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை கொண்டுவரப் பட்டு உள்ளது. சமூக நீதி வரலாற்றில் ஓர் முக்கியமான மைல் கல்லாக அமைந்துள்ள இம்முடிவை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது. பதிவாளர், முதுநிலை தனி உதவி யாளர்கள், உதவி நூலகர்கள், இள நிலை நீதிமன்ற உதவியாளர்கள், இள நிலை கணினி புரோகிராமர், நீதிபதி சேம்பர் பணியாளர்கள் ஆகிய பதவி களுக்கு இனி பட்டியல் சாதி, பழங்குடி யினர் இட ஒதுக்கீடு அமலாகும்.
75 ஆண்டு காலம் நிலவிய அநீதிக்கு முற்றுப்புள்ளி
இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இத்தகைய முடிவு உச்ச நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்படுகிறது என்பது, இவ்வளவு காலம் எத்தகைய புறக்கணிப்பு, பணி நியமனங்களிலும், பதவி உயர்வுகளிலும், அங்கே நிகழ்ந்து வந்திருக்கிறது என்கிற கசப்பான உண்மையை சுட்டிக்காட்டு கிறது. இம்முடிவு குறித்து உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ள கருத்து முக்கியமான தாகும். “அனைத்து அரசுத் துறைகளிலும், பல உயர் நீதிமன்றங்களிலும் ஏற் கெனவே பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டு விதிமுறைகள் உள்ளன. அப்படியிருக்க, உச்சநீதிமன்றம் மட்டும் ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுக்கான பல தீர்மானகரமான தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஆகை யால், ஒரு நிறுவனமாக அது இந்த கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். நம்முடைய செயற்பாடுகள் நம்முடைய கொள்கை களைக் பிரதிபலிக்க வேண்டும்.” என்ற அவரது கருத்து 75 ஆண்டு கால தாமதம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் சுய விமர்சனமாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
நீதிபதிகள் நியமனங்களிலும் இடஒதுக்கீடு அவசியம்
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களிலும் இட ஒதுக்கீடு தேவைப்படுவதையே தரவுகள் காண்பிக்கின்றன. தற்போதைய முடிவு நீதிபதிகள் நியமனங்கள் குறித்த விவாதத்தையும் பொது தளத்தில் உருவாக்குமென்பதில் ஐயமில்லை. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவாத கருத்துக்களை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்வைத்து வரும் வேளையில், உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள இம் முடிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இம் முடிவை மகிழ்ச்சியுடன் பாராட்டி வர வேற்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.