tamilnadu

உயரமாக சாலை அமைப்பதை கைவிடக் கோரிக்கை...

விருதுநகர்:
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட கசாப்புக்காரர் தெருவில் அதிக உயரமாக சாலை அமைப்பதால் வீடுகள் பள்ளத்திற்குள் செல்வதோடு, மழைநீர் புகும் அபாயம் உள்ளதாக மக்கள் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர். அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- கசாப்புக்காரர் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தற்போது புதிய சாலைஅமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏறகனவே, உள்ள சாலையின்மேல் புதிதாக ஒரு அடி உயரத்திற்கு மேல் சாலை அமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு செய்தால், ஏராளமான வீடுகள் பள்ளத்திற்குள் சென்று விடும், சாலை உயரமானால், மழை நீர் குடியிருப்புகளுக் குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. ஏற்கனவே உள்ள பழுதடைந்த சாலையை அகற்றி விட்டு, அதே அளவில் புதிய சாலை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

;