tamilnadu

img

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு

சென்னை, ஏப்.21- விவசாயிகளையும், ஆலைத் தொழிலாளர்களையும் பெருமளவில் அணி திரட்டுவோம் என மூத்த தொழிற்  சங்கத்தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒரு வருமான வே.மீனாட்சிசுந்தரம் கூறினார்.  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்  ளது. அதையொட்டி வரவேற்புக் குழு  கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி யில் புதனன்று (ஏப். 20) நடைபெற்றது. வடக்கு மண்டல செயலாளர் ஆர்.ரவிக்குமார் தலைமை தாங்கினார். தெற்கு மண்டல செயலாளர் ஏ. முருகானந்தம் வரவேற்றார். வரவேற்புக்குழு தலைவராக மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஸ்தா பக தலைவர்களில் ஒருவரான வே. மீனாட்சி சுந்தரம், செயலாளராக ஆர். ரவிக்குமார், பொருளாளராக ஏ.முரு கானந்தம், துணைத் தலைவர்களாக வி.குமார், எம்.தனலட்சுமி, கே.அருள் செல்வன், எம்.சாலட், விஜயலட்சுமி, என்.பால்ராஜ், இணைச் செயலா ளர்களாக சி.திருவேட்டை, கே.ரவிச் சந்திரன், எம்.தயாளன், டி.ஸ்ரீதர், டி. அறிவழகன் உள்ளிட்ட 222 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டிற்கான இலச்சினையை வே. மீனாட்சிசுந்தரம் வெளியிட்டு பேசு கையில், தமிழக அரசியல் களத்தில் ஒரு வலுவான அரசியல் சக்தியாக  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாற வேண்டும். தமிழகத்  தில் உள்ள சாதாரண தொழிலாளர் களும், விவசாயிகளும் மின்சார வாரிய தொழிலாளர்களின் போராட்டங்களை கூர்ந்து கவனிப்பவர்கள். அவர்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. எனவே எளிதில் உங்களால் விவசாயிகளை திரட்ட முடியும். புதிய முழக்கங்களோடு, புதிய  உக்தியை உருவாக்கக் கூடிய, விவ சாயிகளை, விவசாயத் தொழிலா ளர்களை, ஆலைத் தொழிலாளர் களை திரட்டக் கூடிய மாநாடாக இந்த மாநாடு அமைய வேண்டும். தமிழக  அரசியலிலே மின்வாரிய தொழிலா ளர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்  பார்கள், விவசாயத் தொழிலாளர் களை பாதுகாப்பார்கள் என்ற நிலை யை உருவாக்க வேண்டும். அதை  நோக்கிய பணிகளை முன்னெடுப் போம் என்றார். மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் பேசுகையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கு, விவசாயி களை, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு மாநாட்டு தகவல்களை மக்களிடம் கொண்டுசெல்வோம், அவர்களின் ஆதரவையும் திரட்டுவோம் என்றார்.

வலுவான போராட்டம்

பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந் திரன் பேசுகையில், இன்றைய அரசி யல் சூழலில் இந்த மாநாடு சென்னை யில் நடைபெறுவது மிகவும் பொருத் தமானது. செந்தொண்டர்கள் அணி வகுப்புடன் இந்த மாநாடு நடைபெற உள்ளது. வர்க்க ஒற்றுமையை, தொழிற்சங்க ஒற்றுமையை பலப் படுத்துவது குறித்த மாநாடாக இந்த மாநாடு அமையும். அனைத்து தரப்பு தொழிற்சங்கங்களையும் இணைத்து வருங்காலங்களில் ஒரு வலுவான  போராட்டத்தை முன்னெடுத்து வாரிய உரிமைகளையும், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்க ளையும் பாதுகாப்போம் என்றார். முன்னதாக சென்னை, காஞ்சி புரம், செங்கல்பட்டு, அனல்மின் ஊழி யர்கள் சார்பில் மாநாட்டு நிதிக்கு முதல் தவணையாக 13 லட்சம் ரூபாய் நிதி வரவேற்புக்குழு தலைவர் வே. மீனாட்சி சுந்தரத்திடம் வழங்கினார் கள். மாநில செயலாளர் எம்.தயாநிதி நன்றி கூறினார்.