tamilnadu

img

ஒன்றிய அரசிடம் நிதி பெற்று பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கிடுக!

திண்டுக்கல்,டிச.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட  23 ஆவது மாநாடு வேடசந்தூரில் செவ்வாயன்று துவங்கியது.  இந்த மாநாட்டில் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது: 

சிறுபான்மை மக்களை தாக்குவதா?

நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது கொலை வெறித்தாக்குதலை நடத்தி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் தினத்தன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநி லங்களில் சர்ச்சுகளை இடித்துத் தாக்குதல் நடத்தி யுள்ளார்கள். ஏசு சிலையை உடைப்பது, பாதிரியார்கள் மீது தாக்குதல் என கொடூரமான மிருகத்தனமான தாக்கு தலை தொடுத்திருக்கிறார்கள். ஹரித்துவாரில் சாமி யார்கள், முஸ்லிம்களை கொலை செய்வோம் என்று பகிரங்க மாக பேசியுள்ளனர்.  காலம் காலமாக மக்கள் ஒற்றுமையுடன் வாழும் மதச்சார்பற்ற இந்திய நாட்டில்  சங்பரிவாரக் கும்பல்கள்  கொலைவெறியோடு பேசுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கண்டிக்கிறது.  ஆனால் பிரதமர் நரேந்திரமோடி ஒரு  வார்த்தை கூட கண்டனம்  தெரிவிக்கவில்லை.  தமிழ்நாட்டில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்துள்ளது போல இந்தியாவில் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றுசேர்ந்து நாட்டுக்கு ஏற்பட்டிருக்கிற பேராபத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.  எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக பாஜக பலரையும் களத்தில் இறக்கிவிட்டுள்ளது. மம்தா பானர்ஜியும் அதற்கு துணை போவது போல் தான் தெரிகிறது. 

பொங்கல் பரிசு

தமிழக முதல்வர் பொங்கல் பரிசுத்திட்டத்தை அறிவித்துள் ளார். மழை வெள்ளம் வந்திருக்கிற சூழ்நிலையில்  நிவாரண மாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களி டம் உள்ளது. நிதி நெருக்கடி கடுமையாக உள்ளது என்பது  உண்மை தான்.  கஜானாவை அதிமுக  காலி செய்து போயுள் ளது. ஒன்றிய  அரசு தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கொடுக்க மறுத்துள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வருவ தாக அறிவித்துள்ளார். எனவே பிரதமரிடம் பேசி மழை வெள்ள  நிவாரணத்தை பெற்று  மக்களுக்கு பொங்கல் பண்டிகையை யொட்டி குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்கமுன்வர வேண்டும். 

அதிமுக ஊழல்கள்

அதிமுக ஊழல்கள் குறித்து திமுக நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் ரூ.20 கோடி பெறுமானமுள்ள அரசு நிலங்களை தனியாருக்கு  பட்டா போட்டு கொடுத்தது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படி தனியாருக்கு அதிகாரிகள் மட்டுமே பட்டா போட்டுக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. அந்த அதிகாரிகளுக்கு பின்னால் இருந்து கட்டாயப்படுத்தியது யார்.? அரசியல் செல்வாக்குள்ள உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் யாரும் சொல்லாமல் இந்த 109 ஏக்கர் நிலத்தை பட்டா போட்டுக் கொடுக்க முடியாது.  அதிமுக ஆட்சியின் போது இப்படி பல்வேறு மாவட்டங்களில் அரசு நிலத்தை பட்டா போட்டுக்கொடுத்தது தொடர்பாக நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.   பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி,  என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.