பேச்சு சென்னை, ஜூலை 17 - கட்சி பத்திரிகையை படிப்பதும், அதை மக்களிடம் பரவலாக்குவதும் ஒவ்வொரு கட்சி உறுப்பினரின் அடி ப்படை கடமை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குண சேகரன் கூறினார். விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா உருவப்படத் திறப்பு மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று (ஜூலை 15) தென்சென்னை மாவட் டத்தில் நடைபெற்றது. படத்தை திறந்து வைத்து என்.குணசேகரன் பேசியது வருமாறு: கட்சி பத்திரிகையை படிப்பதும், அதை மக்களிடம் பரவலாக்கு வதும் ஒவ்வொரு கட்சி உறுப்பின ரின் அடிப்படை கடமை என்று அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. இந்த கருத்தாக்கம் 120 ஆண்டு வரலாறு கொண்டது. கம்யூனிஸ்ட் உறுப்பினரின் கடமை குறித்து ஆழ மாக, கூர்மையாக விவாதம் நடந்தது. ரஷ்யாவில் இயங்கி வந்த சமூக ஜனநாயக கட்சி மாநாட்டில் கடும் விவாதம் எழுந்தது. ஒரு கட்சி உறுப்பினர் தனது வரு மானத்தில் சிறு பகுதியை கட்சிக்கு லெவியாக தர வேண்டும். அது அவரது அர்ப்பணிப்பு உணர்வை காட்டுகிறது. வெகு மக்களை திரட்டு கிற பணியில் அவர் ஈடுபட வேண்டும். அதற்கு, வெகுஜன அமைப்பில் செயல்பட வேண்டும். இவற்றை செய்ய கட்சி பத்திரிகையை படிப்ப தும், பரவலாக்குவதும் தேவை என அடிப்படை கடமைகளை லெனின் முன்வைத்தார். இதனால் கட்சி பிளவுபட்டு போல்ஷ்விக், மென்ஷ்விக் என கட்சி உடைந்தது. அன்றைக்கு கட்சி உடை வதை பாதுகாக்க வேண்டும் என்று லெனின் நினைத்திருந்தால், கம்யூனிச இயக்கமே இல்லாமல் போயிருக்கும். லெனின் முன்வைத்த கருத்துக்கள் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கோட்பாடுகளாக மாறி, அமைப்பு சட்டங்களாக மாறியது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில், வளர்ச்சியில், தேர்தலில் ஏற்றம் இறக்கம் இருக்கலாம். இந்த கோட் பாடுகளில் எந்த நிலையிலும் சமரசம் கூடாது என்பதுதான் லெனினியம். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றி வருகிறது. கட்சி பத்திரிகை பற்றிய உணர்வு உள்ளிட்ட அத்தனையையும் உள்வாங்கிய செயல்பட்டவர் தோழர் என்.சங்கரய்யா. பத்திரிகை படிப்பதை புரட்சிகர உணர்வா கவே கொண்டிருந்தார் சங்கரய்யா
இந்தியாவில் சோசலிசம் கொண்டு வர, மக்கள் ஜனநாயக புரட்சி நடத்தும் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தொழிலாளி, விவசாயி வர்க்க கூட்டணி அமைத்து, மக்கள் ஜனநாயக அரசு அமைப்பது எளி தாக நிகழ்த்தக் கூடியது அல்ல. அதற்கு வர்க்கங்களை திரட்ட வேண்டி உள்ளது. அதற்கு கட்சி பத்திரிகை தேவை. சந்தா இயக்கம் முடியவில்லை. அது ஒரு தொடர் செயல்பாடு, தொடர வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறாவிட்டாலும், கூட்டணி அரசு அமைத்துள்ளது. அதேசமயம் இந்தியாவை இந்து நாடாக மாற்றும் நிகழ்ச்சி நிரலில் இருந்து ஆர்எஸ்எஸ், பாஜக விலக வில்லை. பாஜக ஆதரவு தளம் வலுவாக உள்ளது. கார்ப்பரேட் நலனை பாதுகாக்கும் நடவடிக்கை களில் பின்னடைவு இருக்காது. அம்பானி, அதானி மூலதனத்தை பெருக்கும் நடவடிக்கைகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. எனவே வகுப்புவாத, கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். இந்துத்துவா, கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரலுக்கு மாற்றாக, இடது மாற்றுதான் உள்ளது. தமிழகத்தில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் பெற்ற வெற்றி, பாஜகவிற்கு அரசுக்கு அசுர பலம் கிடைப்பதை தடுத்திருக்கிறது. தமிழ கத்தில் பாஜக எதிர்ப்பு வெற்றி பெற்றிருக்கிறது. மாற்று என்கிற எந்த கருத்தாக்கமும் மக்களை கவர வில்லை. ஒருசில நலத் திட்டங்கள் மக்களை கவர்ந்துள்ளன. இது நீர்க்குமிழி போன்றது. மக்கள் மனங்களை ஈர்க்கும் வகையில் மாற்றை முன்னிறுத்தினால்தான், இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை தடுக்க முடியும்.
சமூக சீர்திருத்த இயக்கம், பகுத் தறிவு கொள்கைகள் மக்களிடத்தில் முற்போக்கு சிந்தனைகளை விதைத் துள்ளது. இருப்பினும், பொருளா தார தளத்தில் மாற்றப்பாதை இல்லை. எனவே, மக்களை சரியான பாதையில் கொண்டு செல்லும் இடது மாற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நிலச்சீர்திருத்தம் நிறைவேற்றப் படாமல் உள்ளது. சாதி மறுப்பு திரு மணங்கள் குறைவாக நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்வோரை கூலிப்படை வைத்து கொலை செய்யும் நிலையும் உள்ளது. கடந்து வந்த பாதையில் சில சாத கமான அம்சங்கள் உள்ளன. ஆனால் எதிர்கால பாதை இடதுமாற்றை முன்வைத்துதான் இருக்கிறது. வர்க்கங்களை திரட்ட வேண்டும். அரசியல், சமூக பொருளாதார ரீதி யாக உள்ள கடமைகளையும் கட்சி அமைப்புகளை விரிவாக்கம் செய்யும் பணிகளையும் நிறை வேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ச.லெனின், எஸ்.வெள்ளைச்சாமி, கே.வனஜகுமாரி, தி.நகர் பகுதிச் செயலாளர் இ.மூர்த்தி, என்.சங்கரய் யாவின் மகன்கள் எஸ்.சந்திரசேகர், எஸ்.நரசிம்மன் உள்ளிட்டோர் பேசினர்.