அன்புமணியை நீக்கிய ராமதாஸ்!
`இனி நானே பாமக தலைவர்’; தலைவர் பதவி யில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார்” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருப்பது மீண்டும் தந்தை - மகன் இடையிலான மோதலை அதிகரித்தி ருக்கிறது. “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி யில் இருந்து அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். தலைவர் பொறுப்பை இனி நானே எடுத்துக்கொள்ளப் போகிறேன்,” என்றும் “அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலை வராக மட்டுமே செயல்படுவார்,” என்றும்; அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தைலாபுரம் தோட்டத்தில், வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “தலைவராக பொறுப்பேற்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த கார ணத்தை எல்லாம் சொல்ல முடியாது. 2026 தேர்த லில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி உள்ளிட்ட விஷ யங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவு எடுப்போம்” என்று கூறியிருக்கிறார். பாமக நிறுவனரான ராமதாஸ், ஏற்கனவே தனது பேரன் முகுந்தனை இளைஞரணி செய லாளராக அறிவித்ததற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அந்த விவகாரம் கட்சி மேடையிலேயே பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், தற்போது அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ராம தாஸே அந்த பொறுப்பை கையில் எடுத்திருக்கி றார். ``அடுத்த வருடம், அதாவது 2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் இளைஞர்களை வழி நடத்து வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக” ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். ராமதாஸ் வீட்டின் முன்பு போராட்டம் இந்நிலையில், அன்புமணியின் ஆதரவா ளர்கள், திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள ராமதாஸின் இல்லத்தை முற்றுகையிட்டு பாமக-வில் இருந்து நீக்கப்பட்ட திண்டிவனம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ராஜேஷ் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடு பட்டனர். பாஜக வேலையா? இதனிடையே, பாமக-விற்குள் எழுந்துள்ள இந்த மோதல், பாஜக-வின் வேலையாக இருக்க லாம் என்று யூகங்கள் வைக்கப்படுகின்றன. தமி ழக கட்சிகளை உடைப்பதன் மூலம், தன்னை பெரிய கட்சியாக காட்டி, அதன் மூலம் கூட்ட ணிக்குத் தலைமை தாங்கவும், தமிழகத்தில் 2-ஆவது பெரிய கட்சி என்று காட்டிக்கொள்ளவும் இந்த வேலைகளை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமித்ஷா தமிழகம் வரும் நேரத்தில் இந்த சம்பவங்கள் நடத்திருப்பதும் சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.