tamilnadu

img

குறைவான பேருந்துகளே இயங்கியதால் பொதுமக்கள் அவதி

குறைவான பேருந்துகளே இயங்கியதால் பொதுமக்கள் அவதி

பாபநாசம், ஜுன் 16-  தமிழக முதல்வர் தஞ்சாவூர் வருகையையொட்டி, திங்கட்கிழமை காலை மிக குறைவான பேருந்துகளே இயங்கியதால், பாபநாசத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாகச் செல்ல நின்றுக் கொண்டிருந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.  பாபநாசத்தில் கும்பகோணம், தஞ்சாவூர் பேருந்து நிறுத்தங்களில் நீண்ட நேரம் ஏராளமான பொதுமக்கள் காத்து நின்றனர். பாபநாசத்திலிருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைக்கென கும்பகோணம், தஞ்சாவூருக்கு சென்று வருகின்றனர். திங்களன்று காலை சில பேருந்துகளே தஞ்சாவூர், கும்பகோணம் சென்றதால், அதிலும் படிக்கட்டுகளில் பொதுமக்கள் தொங்கியபடி சென்றதால், பாபநாசத்தில் கல்லூரி மாணவிகள், பெண்கள், வயதானவர்களால் பேருந்துகளில் ஏற முடியாத நிலை இருந்தது. சிகிச்சைக்குச் செல்ல நின்ற நோயாளிகளும் சிரமப்பட்டனர்.  இதே நிலைதான் பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத்துறை, உத்தாணி, சுந்தரப் பெருமாள்கோயில், திருவலஞ்சுழி உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களிலும் இருந்தது.