சாலைப்பணியாளர் சங்கம் அறிவிப்பு உடுமலை, டிச.28- மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கண்டித்து, ஜனவரி 10 ஆம் தேதி கருப்பு துணி முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டம் நடத்த நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணி யாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழ மையன்று உடுமலையில் நடை பெற்றது. மாநில தலைவர் மா.பால சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில், தமிழகம் முழுவதும் 12,349 கிலோ மீட்டர் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளை, மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் செயல்படுத்தினால் தனியார் பெரு முதலாளிகளுக்கு சாதகமாக அமையும். டோல்கேட் அமைத்து பல கோடி ரூபாய் பொது மக்களிடம் வசூல் செய்ய வழிவகை செய்யும். எனவே, உடனடியாக நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதை ரத்து செய்ய வேண்டும். சாலைப்பணி யாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தை யும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. போராட்ட அறிவிப்புகள் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஜனவரி10 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகத்தின் முன்பாக கருப்புத்துணி முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டம் நடத்து வது, ஜனவரி 20 ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தி மார்ச் மாதம் தமிழக முதல்வரிடம் கையெழுத்து பிரதிகளை வழங்குவது, சட்டப்பேர வையில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை நடைபெறும் நாளில் அரசாணை 140 இன் நகலை தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.