இமானுவேல் சேகரன் பிறந்த நாள் முதலமைச்சர் புகழஞ்சலி
சென்னை, அக். 9 - விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் பிறந்த நாளையொட்டி, “ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காக போராடிய இமானுவேல் சேகர னாரை போற்றி வணங்குகிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். “இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என திமுக அரசின் சார்பில் அவரது நூற்றாண்டையொட்டி அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டுமுதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இமானுவேல் சேகரனாருக்குப் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற நமது அரசின் மற்றொரு அறிவிப்பும் செயல்வடிவம் பெற்று, இம்மாத இறுதிக்குள் முழுமையடையத் தயாராக உள்ளது. எல்லாருக்கும் எல்லாம் எனும் நம் பயணத்தில் சமத்துவத்துக்கான இமானுவேல் சேகரனாரின் போராட்டங்கள் தொடர்ந்து வழிகாட்டும்!” என்று தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.