சென்னை,ஜன.20- அரசு ஊழியர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் வெளியூர்களுக்கு அதிகளவு பயணம் செய்தனர். இதன்மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.119 கோடி வருவாய் கிடைத்து ள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேரு ந்துகள் இயக்கப்பட்டன. கடந்த 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் பண்டி கைக்கு முன்பும், 17, 18, 19 ஆம் தேதியில் பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்பு வதற்கும் 16,500 சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட்டன. அரசு ஊழி யர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் வெளியூர்க ளுக்கு அதிகளவு பயணம் செய்த னர். இதன்மூலம் அரசு போக்கு வரத்து கழகத்திற்கு ரூ.119 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 11, 12, 13 ஆகிய 3 நாட்களில் சுமார் 5 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர். இதன்மூலம் ரூ.62 கோடி வருவாயும், 17, 18, 19 ஆம் தேதிகளில் 4.5 லட்சம் பேர் பய ணம் செய்ததன் மூலம் ரூ.57 கோடியும் வருமானமும் கிடைத்தது.