tamilnadu

img

பெரியார் சிலை அவமதிப்பு: குற்றவாளிகளை தண்டிக்க சிபிஐ வலியுறுத்தல்

கோவை, ஜன.10- கோவையில் பெரியார் சிலை அவ மதிக்கப்பட்டதை கண்டித்தும், குற்ற வாளிகளை கைது செய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே தந்தை பெரியார் படிப்பகம் உள்ளது. இங்கு திராவி டர் கழகத்தின் சார்பில் பெரியார் சிலை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஞாயி றன்று பெரியார் சிலைக்கு மர்ம நபர் கள் காவி பொடி தூவி செருப்பு மாலை அணிவித்து உள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி அங்காங்கே கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, கோவை புலியகுளம் பகுதியிலுள்ள பெரியார் சிலை அருகில் அனைத்து கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் த.நாகராஜ். கே.நாக ராஜ், சுரேஷ் பாபு, வீராசாமி முத்து, திரா விட கழகம் வீரமணி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் ஜெயராஜ், அமிர்தம் மாள், விடுதலை சிறுத்தைகள் மணி கண்டன், மக்கள் நீதி மையம் தளபதி ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.