tamilnadu

img

பயிர் கப்பீட்டுத் தொகை வழங்குக! விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பயிர் கப்பீட்டுத் தொகை வழங்குக! விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஜுன் 17-  நெல், பருத்தி, எள்ளு ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் பயிர் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலை திட்டத்தை உடனே துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  விவசாயிகள் சங்கச் செயலாளர் டி. அண்ணாதுரை மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பி. காளியப்பன் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எம். சேகர், விவசாய தொழிலாளர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் பி. கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ராதா,  மாவட்டக் குழு உறுப்பினர் வி.எஸ். கலியபெருமாள், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.ஜான் கென்னடி உள்ளிட்டோர் பேசினர்.