tamilnadu

img

தாதுமணல் - கனிமவளத் தொழிலை அரசே நடத்த வேண்டும்!

யர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ள நிலையில், இதில் குற்றமிழைத்தவர் களின் சொத்துக்களை முடக்குவது டன், கனிமவளத் தொழிலை முழுமை யாக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

16 ஆண்டுகளாக  நடைபெற்ற விசாரணை

தூத்துக்குடி, கன்னியாகுமரி, திரு நெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக நடை பெற்றுள்ள சட்டவிரோத தாதுமணல் கொள்ளை பற்றி  விரிவான விசாரணை  மேற்கொண்ட உயர் நீதிமன்றம், 16  ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பளித்து ள்ளது. அதில் அரிய தாதுமணல் கொள்ளை நடந்திருப்பதை உறுதி செய்துள்ளதுடன், அரசியல்வாதிகள், அதிகாரிகள், சுரங்க நிறுவனங்கள் இடையிலான தொடர்பை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்றும் முக்கிய மான தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்புக்குரியதாகும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களி ல் தாது மணல் எடுப்பதற்காக உரிமம் பெற்ற 7 நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக, அணு சக்திக்கு தேவையான அரிய கனிமம் உள்பட எடுத்து ஏற்றுமதி செய்தன. பல லட்சம் கோடி  ரூபாய் மதிப்பு வாய்ந்த இந்த அரிய கனி மங்களின் கொள்ளை, ‘பிரண்ட் லைன்’ உள்ளிட்ட ஊடகங்களின் விரிவான செய்திகளின் மூலம் அம்பலப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றமும், அரசும் குறிப்பிட்ட நிறுவனங்களின் கிடங்குகளை மூடியதுடன், பல்வேறு விசாரணை குழுக்களும் அமைக்கப் பட்டன

. ரூ. 5,832 கோடி அபராதம் வசூலிக்க உத்தரவு

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் எம். ஜோதிராமன் ஆகியோர்,  தாது மணல் எடுக்கத் தடை விதிக்கும் முன், சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கடற்கரை மணலுக்கான ராயல்டி மற்றும் அபராதமாக மட்டும் ரூ. 5 ஆயிரத்து 832 கோடியே 29 லட்சம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், சீல் வைக்கப்பட்டிருக்கும் கிடங்குகளிலும், தொழிற்சாலைகளி லும் குவிந்திருக்கும் சுமார் 1.4 கோடி டன் தாது மணல், அரை பதப் படுத்தப்பட்ட மணல் மற்றும் பதப் படுத்தப்பட்ட கனிமங்களின் தற்போதைய அளவு மோனோசைட் உட்பட அனைத்து வகையான BSM களையும் கையாள உரிமை பெற்ற ஒன்றிய அரசின் நிறுவனமான இந்திய அரிய மண் நிறுவனத்திடம் (IREL) உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

சொத்துக்களை  முடக்க வேண்டும்!

இந்நிலையில், அபராதத் தொகை யை முழுமையாக வசூலிப்பதுடன், கிடங்குகளில் இருக்கும் தாதுக்களை ஒப்படைத்து அதில் கிடைக்கும் லாபத்தையும் பெற்று தமிழ்நாட்டு கஜானாவில் சேர்க்க வேண்டும். இவ்வாறு முறைகேடான தொழிலில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக் களை அரசுடமையாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், இந்த வழக்கு விசாரணை நடந்தபோதே 2018 முதல் 2022 வரை 4 ஆண்டுகளுக்கு சுமார் 16 லட்சம் டன் அளவிலான தாது மணல் கடத்தப் பட்டுள்ளது. அதில், சுமார் 6,449 டன் அளவிலான கனிமங்கள், அணு சக்திக்கு தேவையான மோனோசைட் என கண்டறியப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்  பட்ட வழக்கறிஞர் சுரேஷ், கார்னெட்,  இலுமினைட் உள்ளிட்ட தாதுமதூத்துக்குடி துறைமுகம் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டதை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சி 4ஆம் பக்கம்

தாதுமணல் உட்பட  கனிமவளத் தொழிலை 

அரசியல் செல்வாக்கு  இல்லாமல் நடந்திருக்காது

அந்த வகையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள், மேல்மட்ட அதிகாரிகள், சுங்கத்துறை மற்றும் பெரும் கார்ப்பரேட் தொடர்புடனே இந்த கொள்ளையை முன்னெடுத்திருக்க முடியும்.  எனவே, சிபிஐ மேற்கொள்ளும் விசாரணை அனைத்து தரப்பாரையும் உள்ளடக்கி, முழு வலைப்பின்னலையும் வெளிக் கொண்டுவருவதாக அமைய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

சட்டமன்றத்தில் விவாதம்  நடத்தப்பட வேண்டும்!

இந்த வழக்கு தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, சத்யபிரதா சாகு மற்றும் வழக்கறி ஞர் வி. சுரேஷ் ஆகியோர் சமர்ப்பித்த அனைத்து அறிக்கை களையும் செல்லத்தக்கதாக நீதிமன்ற அமர்வு அறி வித்திருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு இந்த அறிக்கை களை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பதுடன் இது தொடர் பான சிறப்பு விவாதத்தை முன்னெடுக்க வேண்டும். இந்த விசயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொடக்கம் முதலே தீவிரமான தலையீட்டைக் கோரி வந்துள்ளது. அரிய கனிமங்கள், தாதுமணல் உள்பட கனிமவள தொழில் மொத்தமும் அரசின் வசமே இருக்க  வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அப்போது தான் இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும், தாது மணல் வருவாய் நேரடியாக அரசிடம் சேர்வது, மக்கள் நலத் திட்டங்களுக்கு உதவிடும். எனவே, தாதுமணல்,  கனிமவளத் தொழில்களை முழுமையாக அரசுடை மையாக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு பெ.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.