தேனி, அக்.15- முதல் போக பாசனத் திற்கு மஞ்சளாறு, சோத்துப் பாறை அணையிலிருந்து தண்ணீரை சனிக்கிழமை யன்று தேனி மாவட்ட ஆட்சி யர் க.வீ,முரளீதரன் திறந்து வைத்தார். மஞ்சளாறு அணை யில் இருந்து தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 3,386 பழைய ஆயக் கட்டு பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு வினாடிக்கு 60 கனஅடி வீதமும், 1,873 ஏக்கர் புதிய ஆயக்கட்டு பகு திகளில் உள்ள நிலங்களுக்கு 40 கனஅடி வீதமும் தண் ணீர் திறக்கப்படும் . இதன் மூலம் தேனி மாவட்டம் பெரி யகுளம் வட்டத்திற்குட்பட்ட தேவதானப்பட்டி, கெங்கு வார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 3,148 ஏக்கர் நிலங்களும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கணவாய்பட்டி, வத்தலக்குண்டு, குன்னுவ ராயன் கோட்டை, சிவஞான புரம் ஆகிய கிராமங்களில் உள்ள 2,111 ஏக்கர் நிலங்க ளும் என மொத்தம் 5,259 ஏக் கர் நிலங்கள் பாசன வசதி பெறும். சோத்துப்பாறை அணை யில் இருந்து தண்ணீர் திறப் பால் 1825 ஏக்கர் பழைய நன்செய் பாசன நிலங்களும், 1040 ஏக்கர் புதிய புன்செய் பாசன நிலங்களும் என மொத் தம் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகை யிலும், பெரியகுளம் நக ராட்சி பொதுமக்களின் குடி நீர் தேவைக்காகவும் தண் ணீர் திறந்து விடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வுகளின் போது, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பால்பாண்டி, பொதுப்பணித் துறை, (மஞ்சளாறு வைகை வடிநிலக்கோட்டம்) செயற் பொறியாளர் வி.சுகுமார், உதவி செயற்பொறியாளர் கே.சுந்தரம், உதவி பொறி யாளர்கள் பி.ராமேஸ்வரன், எம்.கமலகண்ணன், பெரிய குளம் வட்டாட்சியர் காதர் ஷரீப், விவசாய சங்கங்க ளின் பிரதிநிதிகள், விவசாயி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.