tamilnadu

img

நாகையில் 8 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

நாகப்பட்டினம், செப்.23 - நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.5  கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட  8 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களை தமிழக முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலமாக திறந்து  வைத்தார். இலுப்பூரில் திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி ஆகியோர் குத்துவிளக்கு  ஏற்றி தொடங்கி வைத்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏர்வாடி,  காரையூர், பஞ்சந்திகுளம், ஏனங்குடி, இலுப்பூர், வடமலை, ஆந்தக்குடி, கோட்டப்பாடி ஆகிய கிராமங்களில் தலா ரூ.62.50 லட்சம் மதிப்பீட்டில் புதி தாக கட்டப்பட்ட அரசு நேரடி நெல்  கொள்முதல் நிலையத்தை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி  மூலமாக திங்களன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட இலுப்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் தொடக்க விழா நடைபெற்றது. நீண்ட காலமாக இலுப்பூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற விவசாயி களின் கோரிக்கையை நிறைவேற்றிய தற்காக அப்பகுதி விவசாயிகள் நன்றி  தெரிவித்தனர்.  கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, நெல் கொள்முதல் நிலை யத்தை பார்வையிட்டு விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என். கௌதமன், முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா, ஆத்மா குழு உறுப்பினர் கே. பழனியப்பன் மற்றும் விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.