பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவரான கை ஆல்பிரட் ஆல்ட்ரெட் 1886 நவ.5 அன்று இங்கி லாந்தில் பிறந்தார். அனைத்து மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டுமென எண்ணினார் ஆல்ட்ரெட். உயர்நிலைக் கல்வியை முடித்த ஆல்ட்ரெட், தேசிய பத்திரிகை நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றினார். 1902இல் தனது 16வது வயதில் கிறிஸ்தவ சமூகப் பணியை மேற்கொண்ட இவர், சோசலிஸ்ட் லேபர் கட்சியின் தலைவரான டேனியல் டி லியோன் உரையை கேட்டார். அப்போதிலிருந்து, ஆல்ட்ரெட் சோசலிஸ்ட் ஆனார். முதல் உலகப் போரை எதிர்த்த ஆல்ட்ரெட், 1914-15 இல் நடந்த பல்வேறு போர் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றார். பிரிட்டிஷ் ராணுவ சேவைச் சட்டம், 18 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என விதி வகுத்தது. இதன்படி, 1916 மார்ச் 2 அன்று ஆள்எடுப்பு பணி தொடங்கியது. ஆனால், ஆல்ட்ரெட் ராணுவ உத்தரவுகளுக்கு இணங்க மறுத்ததால், அவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையான ஆல்ட்ரெட், ரஷ்யப் புரட்சியை ஆதரித்தார். 1920 ஜூலை 31 அன்று, லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில், பிரிட்டிஷ் சோசலிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி, சீர்திருத்தக் கட்சி மற்றும் தொழிலாளர் சோசலிஸ்ட் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு புரட்சிகர சோசலிஸ்ட் குழுக்கள் ஒன்று சேர்ந்தன. அதில் இணைந்தார். பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றினார். சமூக நீதியை பிரதானப்படுத்திய கை ஆல்பிரட் ஆல்ட்ரெட், 1963 அக்.16 அன்று காலமானார்.