tamilnadu

img

வன்கொடுமை- கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திடுக !

மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேட்டி

 திருநெல்வேலி, ஜூன் 15-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நெல்லை மாவட்டக்குழு அலு வலகத்தில் அத்துமீறி  நுழைந்து  தாக்கியவர்கள் மீது வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி  வழக்குப்  பதிவு செய்ய வேண்டும் என்று கட்சி யின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் க.கனகராஜ் வலியுறுத்தினார். நெல்லை சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகத்தில் சனிக்கிழமை யன்று  மாநில செயற்குழு உறுப்பி னர் க.கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நெல்லை மாவட்டக்குழு  அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பெண்ணின் குடும்பத்தார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தங்களை கொலை செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதலர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பந்தல் ராஜா உள்ளிட்டோர் அலுவலகத் திற்குள் நுழைந்து அலுவலகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பெண்கள் என பாராமல் சரமாரி யாக அவர்களை தாக்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஆணவக் கொலை உள்ளிட்ட பல்வேறு கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண் டும். சாதிய மறுப்பு திருமணம் செய்த வர்களுக்கு காவல்துறை பாது காப்பு கொடுக்க வேண்டும்,

தன்னிடம் ஒப்படைக்கக் கேட்ட காவலர்

இந்த விவகாரம் தொடர்பாக விபின் என்ற காவல்துறையை சார்ந்தவர் கம்யூனிஸ்ட் கட்சி  அலுவலகத்தில் உள்ள வழக்கறிஞ ரிடம் காதல் ஜோடியை தன்னி டம் ஒப்படைக்கப் பேசியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக் கப்பட்டது. ஒரு பிரச்சனை என்றால் காதல் ஜோடியை காவல் துறையி டம் ஒப்படைக்கச் சொன்னால் அது சரியாகும். அதற்கு மாறாக தன்னிடம் ஒப்படைக்கச் சொல்வது சரியானது அல்ல. அதற்கு என்ன காரணம்?  என்று புரியவில்லை.  பாதுகாப்புக்காக பணிய மர்த்தப்பட்ட காவல்துறையினர் அலுவலகத்தில் இல்லை என்பதை அறிந்தே சமூகவிரோத கும்பல், சாதி மறுப்பு திருமணம் செய்த வர்களை கொலை செய்யும் நோக்கில் அலுவலகத்திற்குள் புகுந்துள்ளது. பட்டியல் சமூ கத்தைச் சேர்ந்த மணமகனை தாக்கும் நோக்கத்தில் செயல்பட்டது குறித்து   வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய் யப்படவில்லை. 

காவல்துறை கண் முன்னாலே தாக்குதல்

அலுவலகத்தில் காவல்துறை யினர் முன்னாலே நடந்த கொலை வெறி தாக்குதல் சம்பவத்திற்குக் கூட  கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. கூலிப்படை யை ஏவும் முயற்சியில் பெண் வீட்டார் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினர் சிலர் பெண் குடும் பத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள் ளனர். தமிழக அரசு காவல்துறை மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் சமூக சாதிய வன்கொடு மைக்கு எதிரான பிரச்சாரத்தை அரசு மேற்கொள்ள வேண்டும். சமூ கத்தில் ஒடுக்குமுறைக்கு ஆளாக் கப்படும் மக்கள் இன்னும் பலர் உள்ளனர். வெள்ளியன்று நடந்த சம்பவத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.  தொலைபேசி உரையாடலை ஆய்வு செய்க! திருமணம் செய்து கொண்ட பெண்ணின் தாய் மற்றும் அவரது குடும்பத்தினரின் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினால் கூலிப்படையினருடன் உள்ள தொடர்பு குறித்த தகவல் கள் கிடைக்கப் பெறும். காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை யும் களைய வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.  பேட்டியின் போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி. பாஸ்கரன், பி. கற்பகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  ஆர்.மோகன்,எம்.சுடலைராஜ்,எஸ்.பெருமாள், மாவட்டக்குழு உறுப்பி னர் கு.பழனி, திராவிட தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.