மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி கண்ணூர் இ,கே.நாயனார் அகாடமியில் கட்சி வரலாறு தொடர்பான அருங்காட்சியகத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் ஞாயிறன்று திறந்து வைத்தார். அங்கு முன்னாள் முதல்வர் இ.கே.நாயனாரின் மெழுகுச் சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. அதை மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், ஆசிரியர் சாரதா உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர்.