தூத்துக்குடி, டிச.22- தூத்துக்குடி பெருவெள்ளத்தால் கடந்த 6 நாட்களாக பொது மக்கள் அவதி யடைந்து வருகின்றனர். தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரண மாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிகன மழை யால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புதியம்புத்தூர் அருகே உள்ள குளங்களும் உடைந்ததால் தூத்துக்குடி மாந கர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக முத்தம்மாள் காலனி, பாத்திமா நகர், ராஜகோபால் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், பாரதி நகர் கே.டி.சி. நகர், ஸ்டேட் பாங்க் காலனி, நேதாஜி நகர், சின்னக்கண்ணு புரம், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர், ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் கடந்த 6 நாட்களாக அப்பகுதி பொது மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி யவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாக வும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தன்னார்வலர்கள் ஆகியோர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். எனினும் தூத்துக்குடி மாநகர் பகுதியிலும், மாவட்ட த்தின் சில பகுதிகளிலும் சாலை துண்டிப்பு, பாலங்கள் உடைப்பு உள்ளிட்ட கார ணங்களால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதில் தற்போதும் சிக்கல் நீடித்து வரு கிறது. அரசு,
மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து இரவு, பகலாக நடைபெற்று வரு கிறது. ஆனாலும் வெள்ளம் வடியாததால் வீடுகளில் தவிப்போரை மீட்பதில் சிரமம் இருந்து வருகிறது. அவர்களுக்கு மீட்பு குழுவினர் உணவு, தண்ணீர் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். எனினும் சில இடங்களில் அதிக அளவு தண்ணீர் மற்றும் மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை தொடர்வதால் குறிப்பிட்ட இடங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கனமழை காரணமாக ஆயிரக் கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டி ருந்த பயிர்கள் நாசமாகி உள்ளன. இதே போல் ஆடு, மாடு, கோழிகள் என ஆயிரக் கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மழை வெள்ள நீரை அகற்ற வலியுறுத்தியும், நிவாரண உதவி வழங்க வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.