அம்பத்தூர், செப். 28- ஆவடி மாநகராட்சி மன்றக் கூட்டம் வெள்ளியன்று (செப். 27) மேயர் உதயகுமார் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 10ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அ.ஜான், மழைக் காலம் தொடங்குவதற்கு முன் எனது வார்டில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும், பழுதடைந்த கால்வாய்களை சீரமைக்க வேண்டும், மழை நீர் தங்கு தடையின்றி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 6 கூட்டங்களில் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறேன். அதேபோல் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தினசரி கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்று கூறினார். இதற்கு மாநகராட்சி தரப்பில் உறுதி யான பதில் அளிக்கப்படாத காரணத்தால் கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி ஜான் வெளிநடப்பு செய்தார்.