மதுராந்தகத்தில் 2000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்!
மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் சென்னை, செப். 17 - மதுராந்தகத்தில் 2000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற் கான மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந் தார். பன்முக வளர்ச்சித் திட்டங்கள் கொண்ட அந்த பட்ஜெட்டில், இந்தியா வின் 2-ஆவது மிகப்பெரிய பொருளா தாரம் கொண்ட மாநிலமாக இருக்கக் கூடிய தமிழகத்தின் தலைநகரமான சென்னை அருகே 2000 ஏக்கர் பரப்ப ளவில் பள்ளிகள், கல்லூரிகள், தனி யார் நிறுவனங்கள், வீட்டு வசதிகள் மற்றும் பூங்காக்கள் கொண்ட புதிய குளோபல் சிட்டி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை, தில்லி, மும்பை, புனே போன்ற மாநகரங்களில் இருக்கக் கூடிய போக்குவரத்து நெரிசல், காற்றின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மக்கள் தொகைப் பெருக்கம் போன்ற பலவிதமான பிரச்சனைகளைக் குறைக் கும் நோக்கில் துணை நகரங்கள் உரு வாக்கப்படுகின்றன. அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி 2000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஐந்து இடங் களை அடையாளம் கண்ட ஆய்வு நிறுவனங்கள், டிட்கோ வுக்கு அறிக்கை சமர்ப்பித்தன. அதனடிப்படையில் செங்கல் பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த சர்வதேச நக ரத்தை அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) டெண்டர் கோரியுள்ளது.