tamilnadu

img

நெல்லை, நாகர்கோவில் மாநகராட்சியில் சிபிஎம் பிரச்சாரம்

திருநெல்வேலி மாநகராட்சி 55வது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் முத்து சுப்பிரமணியனை ஆதரித்து பாளையங்கோட்டை தியாகராஜநகரில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தைத் துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சி 20 வது வார்டு அன்பு நகர் பகுதியில் வேட்பாளர் அம்பிகா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உசைன், என்.எஸ்.கண்ணன், ஒன்றிய செயலாளர் ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.