tamilnadu

img

நாடு தழுவிய வேலை நிறுத்த விளக்க மக்கள் சந்திப்பு இயக்கம்

உதகை, மார்ச் 21- சர்வதேச வன நாளை முன்னிட்டு முது மலை புலிகள் காப்பகத்தில் மாணவர்க ளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. சர்வதேச வன நாள் ஞாயிறன்று கடைப் பிடிக்கப்பட்டது. இதையொட்டி, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடந்தன. நிகழ்ச்சியில், பொக்காபுரம் பள்ளி தலைமையாசிரியர் கலாவதி தலை மையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் கள் பங்கேற்றனர். முதுமலை புலிகள் காப் பக சரகர்கள் ஏ.ஏ.விஜய், மாரியப்பன், மனோஜ்குமார் ஆகியோர் மாணவர்க ளுக்கு வன மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். பின் னர், கக்கநல்லா சோதனைச்சாவடி பகு தியில் வனத்திலிருந்து பிளாஸ்டிக் உட்பட கழிவுகளை மாணவர்கள் சேகரித்தனர். மேலும், அந்த சோதனைச்சாவடி வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி, வனங்கள் மாசுப்பாடு மற்றும் வனத்தீ குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். பின்னர், முதுமலை யில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இறுதி யாக, உதகை அரசு கல்லூரியில் மரக்கன்று கள் நடப்பட்டு, கேர்ன் ஹில் வனப்பகுதி யில் தூய்மைப்பணி நடத்தப்பட்டது.