tamilnadu

img

செயல் தலைவராக எஸ்.நம்புராஜன் தேர்வு

ஹைதராபாத், டிச.28- ஹைதராபாத்தில் நடந்த ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் அகில இந்திய மூன்றாவது மாநாட்டில் செயல் தலைவராக எஸ். நம்புராஜன் தேர்வு செய்யப்பட்டார். புரவலராக காந்தி காங்குலி, தலைவராக கே.கிரீஷ் கீர்த்தி, பொதுச் செய லாளராக வி.முரளீதரன், பொருளாளராக கே.ஆர்.சக்கரவர்த்தி, துணை தலைவர்களாக பா.ஜான்சிராணி, எம்.அடிவய்யா, அனீர்பன் பானர்ஜி, இணை செயலாளர்களாக கைரளி எம்.பி,  ரிஷிகேஷ் ராஜிலி, தம்யா கங்குலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பான ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் (என்பிஆர்டி) 3 ஆவது அகில இந்திய மாநாடு ஹைதராபாத்தில் டிசம்பர் 26 திங்களன்று உற்சாகத்துடன் துவங்கி புதனன்று நிறைவடைந்தது.  மாநாட்டையொட்டி திங்களன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றினர். செவ்வாயன்று பிரதிநிதிகள் மாநாட்டின் துவக்கமாக மாநாட்டுக் கொடியை என்பிஆர்டியின் தலைவரும் மேற்குவங்க முன்னாள் அமைச்சருமான காந்தி காங்குலி ஏற்றி வைத்து மாநாட்டு துவக்க உரையாற்றினார். பிரதிநிதிகள் மாநாட்டுக்கு காந்தி காங்குலி தலைமை வகித்தார். வி.முரளீதரன், எஸ்.நம்புராஜன், பி.ஜான்சிராணி, மோகனன், நாகராஜ், ரிஷிகேஸ், கே.கிரீஷ் கீர்த்தி, தெலுங்கானா மாநிலத் தலைவர் வெங்கட், மாநிலப் பொதுச் செயலாளர் அடுவய்யா ஆகியோர் வழிகாட்டும் குழுவாக செயல்பட்டனர். எஸ்.நம்புராஜன் அஞ்சலி தீர்மானம் மற்றும் வரவு செலவு அறிக்கை முன்மொழிந்தார். வி.முரளீதரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாட்டில் இருந்து தோ.வில்சன், எஸ்.பகத்சிங், தாட்சாயிணி ஆகியோர் விவாதத்தில் பங்கேற்றனர். 

கருத்தரங்கம்

ர்கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர்.பிந்து சிறப்புரையாற்றினார். காந்தி காங்குலி,  டாக்டர் பாரதிராவ் மறு வாழ்வு மைய தலைவரும் செயிண்ட் மேரீஸ் கல்விக்குழும தலை வருமான கே.வி.கே.ராவ், முன்னாள் எம்எல்ஏ திருப்பதி சீத்தா ராமுலு, பிரபல விஞ்ஞானி பி.ஜமீலா உள்ளிட்டோர் பேசினர்.

அந்நியச் செலாவணி கையிருப்பு 56,350 கோடி டாலராக சரிவு!

புதுதில்லி, டிச. 28 - இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பர் 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 56,350 கோடி டாலராக சரிந்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து ஐந்து வாரங்கள் உயர்ந்த பிறகு, கடந்த 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 57.1 கோடி டாலர் குறைந்து 56,349.9 கோடி டாலராக உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில்,  ஒட்டுமொத்த கையிருப்பு 291 கோடி டாலர் உயர்ந்து  56,406 கோடி டாலராக இருந்தது. நீடித்த சரிவுக்குப் பிறகு அந்நியச் செலாவணி கையிருப்பில் அது  தொடர்ந்து ஐந்தாவது வாரமாக உயர்வு கண்டிருந்தது. 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொரு ளாதார நெருக்கடிக்கு இடையே ரூபாய் மதிப்பை பாதுகாக்க வேண்டியிருப்பதாக கூறி, ரிசர்வ் வங்கி  இந்தக் கையிருப்பை பயன்படுத்த வேண்டி யிருந்ததால், அது பின்னர் குறையத் தொடங்கியது. தற்போது ஒட்டுமொத்த அந்நியச் செலாவணியின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் (எப்சிஏ) மதிப்பீட்டு வாரத்தில் 50 கோடி  டாலர் குறைந்து 49,962.4 கோடி டாலராக உள்ளது. தங்கம் கையிருப்பு 15 கோடி டாலர் குறைந்து 4,057.9  கோடி டாலராக உள்ளது. சர்வதேச நிதிய சொத்து  ஒதுக்கீடு (எஸ்டிஆர்) 7.5 கோடி  டாலர் உயர்ந்து 1,818.1 கோடி டாலராக உள்ளது. சர்வதேச நிதியத்தில் (ஐஎம்எப்) நாட்டின் கையிருப்பு   40 லட்சம் டாலர் அதிகரித்து 511.4 கோடி டாலராக உள்ளது. இதனை ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.