மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவின் 102ஆவது பிறந்த நாளையொட்டி பெரம்பூர் பகுதி 37, 46ஆவது வட்டக் கிளைகளின் சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. இதில் சாதிக்கும் இளைஞர் அணி முதலிடத்தையும், நல்லக்கண்ணு அணி 2ஆவது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா மாவட்டக்குழு உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், அதிமுக சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளர் எம்.ஏ.சேவியர், தேசிய விளையாட்டு வீரர் நந்தகுமார், வெள்ளி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.ஸ்ரீதர், திமுக வட்டச்செயலாளர் கா.பாபு, பகுதிக்குழு உறுப்பினர்கள் டி.சரவணன், ஜீவா முனுசாமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.