tamilnadu

img

மேற்குவங்கத்தில் கொலை வெறித் தாக்குதல்: மாணவர்கள் ஆவேசம்

சென்னை, பிப். 25- மேற்குவங்கத்தில் மாணவர் கள் மீது நடத்தப்படும் கொலை வெறி தாக்குதலை கைவிட வேண்டும் என மாணவர் அமைப்பு கள் கோரிக்கை விடுத்துள்ளன. மேற்கு வங்கத்தில் இந்திய மாணவர் சங்கத் தலைவர் அனிஷ்கான் கொல்லப்பட்டதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நாடு முழுவதும் வெள்ளியன்று (பிப். 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத் தில் மாணவர் சங்க தென் சென்னை மாவட்டத் தலைவர் பாரதி, அன்பரசு (ஏஐஒய்எப்) தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நிர்வாகிகள் பிரகாஷ், காவியா, மாவட்ட மிருதுளா, மணி,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதுகுறித்து மாநிலச் செயலா ளர்கள் வீ.மாரியப்பன், தினேஷ்  ஆகியோர் கூட்டாக செய்தியா ளர்களிடம் கூறியதாவது: மேற்குவங்க மாநிலத்தின் அலியா பல்கலைக்கழக மாணவர் அனிஷ்கான் காவல் துறையினரால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மீது அனிஷ்கான் மீது  அளித்த புகாரை திரும்பப்பெற வலியுறுத்தி காவல் துறையினர் இந்த கொலைபாதக செயலை செய்துள்ளனர்.  மாற்றுக் கருத்து கூறும் இடதுசாரி கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களை திரிணாமுல் காங்கிரஸ் திட்ட மிட்டு படுகொலை செய்து வரு கிறது. ஜனநாயக ரீதியாக மாணவர் களின் உரிமைக்காக போராடும் தலைவர்கள் வேட்டையாடப்படும் சூழல் நாட்டில் உருவாகியுள்ளது.  உடனடியாக இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு  மேற்குவங்க அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த படுகொலையில் இரண்டு  காவலர்களை மட்டும் கைது செய்திருப்பது போதுமானதல்ல. இந்த படுகொலையில் தொடர் புடைய காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிலைய வளாகங்களில் மாணவர்க ளின் உரிமையையும், ஜனநாயகத் தையும் பாதுகாக்கும் நடவடிக் கையை அரசு மேற்கொள்ள வேண்டும். மாணவர் அனிஷ்கான் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.