ராங்கியம் ஜல்லிக்கட்டு வீரர்களை விட பார்வையாளர்கள் அதிகம் பேருக்கு காயம்
புதுக்கோட்டை, மே 19- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராங்கியம் அழகிய நாச்சி யம்மன், மரக்கால் உடைய அய்யனார் கோவில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை, சிவகங்கை, பொன்னமராவதி, திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளைச் சேர்ந்த 296 காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. காலை 8.30 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டு பகல் 2 மணிக்கு முடிவடைந்தது. 70 மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு காளைகளைப் பிடிக்க முயற்சித்தனர். இதில் 7 மாடு பிடி வீரர்களும், 18 பார்வையாளர்களும் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்பட்ட 4 பேர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விழாவில் திரு மயம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். பனையப்பட்டி காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஜல்லிக்கட்டில் சுவாரஸ்ய மான நிகழ்வு என்னவென்றால் வீரர் களை விட பார்வையாளர்கள் அதிகம் பேர் காயமடைந்தனர் என்பது தான். பாதுகாப்பு குறைபாடு காரண மாக பார்வையாளர்கள் அதிகம் காயத்தில் சிக்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.