tamilnadu

img

மோடி-அமித்ஷா சர்வாதிகாரம்: இரா.முத்தரசன் கண்டனம்

கோவை, ஜூன் 16- நாங்கள் நினைப்பதுதான் நடக்க வேண்டும் என்கிற சர்வாதிகார போக்குடன் மோடி, அமித்ஷா கூட்டணி செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டினார். கோவையில் வெள்ளியன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகை யில், நமது நாடு ஒரு ஜனநாயக நாடு.  இது எவ்வாறு இயங்க வேண்டும் என்பதுதான் அரசியலமைப்பு சட்டம். ஆட்சியில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் அவர்கள் அனைவரும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அதனை மதித்து அதன் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்”என்றார். நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த  பிறகு படிப்படியாக தற்போது வேகமாக அரசியலமைப்பு சட்டங் களை தகர்த்து எதேச்சதிகாரமாக செயல்படும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். ஹிட்லரை போல மோடி, அமித்ஷா கூட்டணி செயல்படுகிறது. நாங்கள் சொல்வதைதான் கேட்க வேண்டும், நாங்கள் போடுகின்ற சட்டத்தை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் நடவடிக்கை எடுப்போம்,

என்கின்ற அணுகுமுறையில் தான் இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். சுதந்திரமாக செயல்படக்கூடிய அமைப்புகளை எதிர்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளுக் காக பயன்படுத்துகிறது. வருமான வரித்துறை, அமலாக்க துறை இவை களை தவறான முறையில் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சர்வாதிகாரத்தை தான் மோடி அமித்ஷா கூட்டணி நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறது. இதேபோன்று, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு போட்டி அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆளுநர்களுக்கு தனி அதிகாரம் கிடையாது என கடுமையான விமர் சனங்களை உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. ஆனால், அரசியல் நெருக்கடியை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்கின்ற முறையில் ஆளுநரின் செயல்பாடு கள் உள்ளது. இது ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையை குலைத்தால் அவநம்பிக்கைதான் உருவாகும் என்றும் முத்தரசன் கூறினார். ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் ஒரு கட்சியை சார்ந்து செயல்படுகிறார் என கூறி அவரை நீக்க வேண்டும் என  வலியுறுத்தி குடியரசு தலைவரிடமே புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.