பேருந்தில் அமைச்சர் பயணம்'
ஈரோடு, ஜூன் 24- அந்தியூர் பகுதியில் நீடிக்கப்பட்ட பேருந்து வழித் தடத்தில் பேருந்து சேவையினைத் தொடங்கி வைத்து, அமைச்சர் மதிவேந்தன் பேருந்திலேயே பயணம் செய் தார். ஈரோடு மாவட்டம், எரங்காட்டூர், கரும்பாறை புதூர் பகுதியில் கோபிச்செட்டிபாளையம் முதல் அத்தாணி செல்லும் பேருந்தின் சேவையை தொட்டக்கோம்பை வரை நீடிக்கப்பட்டது. இவ்வழித்தடங்களில் ஆதிதிராவி டர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பேருந்து சேவையினை செவ்வாயன்று தொடங்கி வைத்தார். அத் துடன் அரசு பேருந்தில் பொதுமக்களுடன் 7 கிலோ மீட்டர் பயணம் செய்தார். பின்னர், நடமாடும் நியாய விலைக்கடையை திறந்து வைத்தார். குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொது விநியோகப்பொருட்களை அமைச்சர் வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.