சாதிப் பெயர்களை நீக்குவதில் அரசியல் வேண்டாம் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
சென்னை, அக். 11- பொது இடங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதில் எதிர்க்கட்சி யினர் அரசியல் செய்தால் அது சமூ கத்திற்கு செய்யும் துரோகம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரி வித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுகளின்படி ஊர்கள், தெருக்கள், சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டங்களி லும் இதுகுறித்து பேசப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஊர்கள், தெருக் கள், சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கு வது குறித்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்” என்றார். “பழனிசாமி வேண்டுமென்றே இதனை திரித்துக் கூறுகிறார். சாதிப் பெயர்களை நீக்கும் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். அவ்வாறு அரசியல் செய்தால் அது சமூகத் திற்கு செய்யும் துரோகம். சாதிப் பெயர்களை நீக்க நீதிமன்ற அமைப்பு களும் சொல்லியிருக்கின்றன. வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும். நாங்கள் இதை அரசியல் கார ணங்களுக்காக செய்யவில்லை” என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
