tamilnadu

img

கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: அமைச்சர் ஆய்வு

கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து  நிலைய கட்டுமானப் பணி: அமைச்சர் ஆய்வு

கள்ளக்குறிச்சி, அக்.22- கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ரவுண்டானா அருகில் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டு மானப் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 5.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.16.21 கோடி மதிப்பீட்டில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தும் வசதி, 70க்கும் மேற்பட்ட கடைகள், காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, மின் விளக்கு, கழிவறை உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் இது அமைக்கப்படுகிறது. கட்டுமானப் பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன், நகர்மன்ற தலைவர் சுப்ராயலு உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.