மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்; அமைச்சர் கைவிரிப்பு!
சென்னை, ஏப்.21- இந்திய அரசியலமைப்பு சட்டப்படி தமிழகத்தில் மூட நம்பிக்கையை ஒழிக்க அரசு தனிச்சட்டம் கொண்டு வருமா? என்று திமுக உறுப் பினர் மரு.எழிலன் சட்ட மன்றத்தில் துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில ளித்து பேசிய அமைச்சர் எஸ். ரகுபதி, “ஒருவருக்கு நம்பிக் கையாக இருப்பது மற்றொ ருவருக்கு மூடநம்பிக்கை யாக இருக்கிறது. நமது அர சியலமைப்பு சட்டப்படி அவரவர் உரிமையில் தலை யிடுவது சரியாக இருக்காது. இதற்காக ஒரு சட்டத்தை கொண்டு தடுப்பதோ அல் லது ஒன்றை பாதுகாப்பதோ முடியாத ஒன்றாகும். நம்மு டைய கொள்கைகளை பின் பற்றலாம். அதில் தவறு ஏதும் கிடையாது. அதற்காக மற்ற வர்களின் மத நம்பிக்கையில் தலையிடுவது சரியாக இருக் குமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்” என்றார்.
‘தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்’
சென்னை, ஏப்.21- திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், சட்டமன் றத்தில் எழுப்பிய துணைக் கேள்விக்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பதில ளித்தார். அப்போது, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைக்க தொழிலாளர் நலத்துறை யிடம் பேசியிருப்பதாகவும், அதுதொடர்பாக தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருவதாகவும் கூறி னார். மேலும், தமிழில் பெயர்ப் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் ரூ. 500-இல் இருந்து ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருப்ப தாகவும், விரைவில் அனை த்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் கூறினார்.
‘நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படும்’
சென்னை, ஏப்.21- வேதாரண்யம் மாஜிஸ்திரேட் நீதிமன் றத்தில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவார்களா? என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ். மணி யன் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச் சர் எஸ். ரகுபதி, “உயர்நீதி மன்றம் மற்றும் சர்வீஸ் கமி ஷன் மூலம் நீதிபதிகள் நிய மனம் நடைபெறுகிறது. மேஜிஸ்ட்ரேட் நீதிபதிகள் ஆண்டுதோறும் நிரப்ப படுகிறார்கள். அப்படி நிரப் பப்படும் போது கூடுதலாக காலிப் பணியிடங்கள் இரு ந்து வருகிறது. இதனால் ஒரு மேஜிஸ்ட்ரேட் இரண்டு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படு கிறது. விரைவில் நீதிபதி கள் காலி பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுக் கும்”என்றார்.