நாகர்கோவில், செப்.3- கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வா தார கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 1 அன்று தொடங்கிய நடைபயணம் சுமார் 200 கிலோ மீட்டர் கடந்து செப்.3 ஞாயிறன்று நாகர்கோவிலில் நடந்த கோரிக்கை மாநாட்டில் நிறைவடைந்தது. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். குமரி மாவட்டத்தின் வளங்களைப் பாதுகாத்து புதிய வேலை வாய்ப்புகளை உரு வாக்க வலியுறுத்தியும், அதற்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தியும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான்கு குழுக்கள் மாவட்டம் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டன. செப்டம்பர் 1-7 நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற குமரி மாவட்ட பிரச்சாரத்தில் மூன்று குழுக்கள் தங்களது நடைபயணத்தை செப்டம்பர் முதல் நாளில் கேரள எல்லையில் இருந்து துவங்கின. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி தலைமையிலான நான்காவது குழுவின் பயணத்தை சுசீந்திரம்-அக்கரையில் இருந்து மூத்த தலைவரும் வழக்கறிஞருமான செலஸ்டின் துவக்கி வைத்தார்.
‘நெய்தல் நிலம்’ என வரையறுக்கப்பட்ட கடற்கரையை ஒட்டிய பகுதி மக்களை மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை யிலான குழு சந்தித்தது. ‘மருதம்’ என்கிற வயல் சார்ந்த வேளாண் பகுதி மக்களை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.அனந்தசேகர் தலைமையிலான குழு சந்தித்தது. குறிஞ்சி யும் முல்லையும் கலந்த மலை மற்றும் காடுகள் சார்ந்த பகுதிகளை உள்ளடக்கிற நடைபய ணக்குழு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ் தலைமையில் மக்களை சந்தித்தது. இந்த நான்கு குழுக்களும் நாகர்கோவில் மாவட்ட விளையாட்டரங்கம் அருகில் நடந்த மக்கள் கோரிக்கை மாநாட்டில் சங்கமித்தன. நடைபயணக் குழுக்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் நோட்டு மாலைகள், கதராடைகள், சால்வைகள் அணிவிக்கப்பட் டன. சுங்கான்கடையில் திமுக பிரமுகர் ராஜேஷ், விசிக பிரமுகர் முருகன் ஆகியோர் வரவேற் பளித்தனர். ஏராளமான இளைஞர்களும் சிறுவர்களும் நடைபயணத்தில் பங்கேற்றனர். நாகர்கோவில் நகரத்தில் நான்கு திசைகளில் இருந்தும் செங்கொடி ஏந்தி கோரிக்கை முழக்கமிட்டு நடந்த அணிவகுப்புக்கு பொது மக்கள் கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
கோரிக்கை மாநாடு
நாகர்கோவில் வடசேரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு நடந்த கோரிகை மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.பெல்லார்மின், எம்.ஏ. உசேன், என்.எஸ்.கண்ணன், மாநகர செயலாளர் கே. மோகன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ரெகுபதி உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை மாநாட்டு தீர்மானங் களாக்கி அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வுகாண உள்ளதாக தலைவர்கள் தெரிவித்தனர்.
மக்களின் வரவேற்பை பெற்ற நடைபயணம்
இந்த பிரச்சாரம் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பயணக்குழுவினர் தெரிவித்தார்கள். பயணக்குழு செல்லும் இடங்களில் பிரச்சார பயணத்தின் நோக்கத்தையும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும் விளக்கிப் பேசுகையில் பொதுமக்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள். வியாபாரிகளும் பொதுமக்களும் விலைவாசி உயர்வு, வரிவிதிப்புகள், சமீப கால ஒன்றிய அரசின் ஊழல்களை பற்றி பேசுவதற்கு இந்த பிரச்சார பயணம் உதவியது. கொல்லங்கோட்டில் துவங்கி கடலோர பகுதிகளில் மீனவ மக்களிடையே நடைபயணம் மேற்கொண்டது அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியது. ராஜாக்கமங்கலம் துறையில் மீனவ மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதில் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர். மீனவ இளைஞர்கள் போதைப் பொருள்களை கடல் வழியாக கடத்துவதாக சொல்லி அவமானப்படுத்துவதாக நடைபயணக் குழுவிடம் கவலை தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை நடைபயணமானது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன் வைத்தது. இது பரவலாக மாவட்ட மக்களின் வரவேற்பை பெற்றது.