tamilnadu

img

சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக வலுவாகப் போராட மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில மாநாட்டில் பட்டியல் சாதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  24 % அதிகரிப்பு    தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2018-22 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான வன்முறைகள் 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநாடு சுட்டிக்காட்டியது. 2024ன் முதல் ஆறு மாதங்களில் மட்டும் ஏழு சாதி ஆணவக் கொலைகள் பதிவாகியுள்ளன என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகள் முன்னேறி வரும் காலத்திலும், பட்டியல் சாதி மக்கள் அடிப்படை உரிமைகளை மறுக்கும் நிலை தொடர்வதை மாநாடு கவலையுடன் பதிவு செய்துள்ளது. தெருக்களில் நடமாட முடியாமை, பொது இடங்களைப் பயன்படுத்த முடியாமை, மயானங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமை போன்ற பாகுபாடுகள் தொடர்வதாக தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  தொழில்முனைவு துறையில் பின்தங்கிய நிலை  சென்னை மாவட்டத்தில் மொத்த தொழில் முனைவோரில் 0.79 சதவீதமும், காஞ்சிபுரத்தில் 2.39 சதவீதமுமே பட்டியல் சாதியினர் என்ற புள்ளிவிவரம் தொழில்துறையிலும் நிலவும் சாதியப் பாகுபாட்டை வெளிப்படுத்துவதாக மாநாடு சுட்டிக்காட்டியது. கோரிக்கைகள் -    நிலப்பகிர்மானம், பஞ்சமி நிலங்களை மீட்டல் ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். -     எஸ்.சி, எஸ்.டி துணைத் திட்ட நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். -     பாதாள சாக்கடை பணியாளர்களின் பாதுகாப்புக்காக புதிய தொழில்நுட்பங்  களை உருவாக்க வேண்டும். -     அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் -     தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துத்துவா மதவெறி கருத்தியல் சாதிய உணர்வுகளை மேலும் தூண்டுவதாகவும், இதனை எதிர்த்து கருத்தியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் மாநாடு வலியுறுத்தியது. கே.பாலபாரதி முன்மொழிந்த இத்தீர்மானத்தை  கே.ஸ்ரீராம் வழிமொழிந்தார்.