tamilnadu

img

மாற்றுத்திறனோரை ஏந்தும் மாமதுரை

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டின் முதல் முகாம் மதுரையில் உள்ள ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை துவங்கியது;
சு.வெங்கடேசன் எம்.பி முன் முயற்சியில் நடந்த ஒன்றிய அரசின் adip மற்றும் மாநில அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவம் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் இன்று  துவங்கியது. இது அடுத்த  14 நாட்கள் நடைபெற உள்ளது. 
தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முகாமினை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட அனீஷ் சேகர் மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் டி.நாகராஜன், மாநகராட்சி ஆணையர் சிம்ரஞ்ஜித் சிங் கஹ்லோன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் ஆகியோர் பங்கெடுத்தனர். 

;