எஸ்.பி.நத்தம் கிராமத்தில் தலித் குடியிருப்புப் பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கக் கோரிக்கை
மதுரை, ஜூன் 8- மதுரையை அடுத்துள்ள எஸ்.பி.நத்தம் கிராமத்தில் தலித்மக்கள், குயவர் மக்கள் வசிக்கும் குடிநீர் குழாய் வசதி செய்துதர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக எஸ்.பி.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வி. மாரியப்பன் என்பவர் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எஸ்.பி.நத்தம் கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வரை ஊராட்சி யின் சார்பாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது திடமான ஊராட்சி நிர்வாகமின்மையால் குடிநீர் விநியோகம் செயலற்றுப் போய்விட்டது. ஒரு குறிப்பிட்ட மேல்சாதி தெருவில் ஒரே இடத்தில் முப்பது தெருக்குழாய்கள் அமைக்கப்பட்டு கிராமத்தில் வசிக்கக் கூடிய அனைத்துப்பகுதி மக்களும் இங்கு வந்து தண்ணீர் பிடித்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் ஊரின் வடபுறத்தில் வசிக்கும் தலித் குடும்பங்கள், தென்பகுதியில் வசிக்கும் குயவர் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. எனவே அனைத்துத் தெருக்களிலும் ஐந்து தெருக்குழாய் கள் அமைத்து குறிப்பாக தலித் சமூகத்தினர் வசிக்கும் தெருக் களில் பத்து தெருக்குழாய்கள் அமைத்துக்கொடுக்க வேண்டும்.
நகை, பணம் திருட்டு
சாத்தூர், ஜூன் 19- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டப் பகலில் இரு வீடுகளின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். சாத்தூர் அருகே உள்ளது குமரெட்டியாபுரம். இப்பகுதி யைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். சலவைத் தொழில் செய்து வரு கிறார். இவர் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். இவ ரது மனைவி தீப்பெட்டி ஆலைக்கு சென்றுள்ளார். இரவு இரு வரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப் பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளேசென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 10 பவுன் நகைமற்றும் ரொக்கப் பணம் 3 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. சாத்தூர் அருகே உள்ள அம்மாபட்டி காலனியைச் சேர்ந்த வர் சுந்தரம். இவரது வீட்டுக கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரத்து 500 ஐ திருடிச் சென்றனர்.